உண்மைதான்.. பாஜகவிற்கு தோல்வியிலும் வெற்றிதான்!
டெல்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக காங்கிரசுக்கு கடும் போட்டியை கொடுத்து தேர்தல் களத்தை பரபரப்பாக வைத்துக்கொண்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் 3வது முறையாக தொடர்ந்து பாஜக ஆட்சி நடந்து வருகிறது. சிவராஜ்சிங் சவுகான் முதல்வராக உள்ளார். வியாபம் உள்ளிட்ட நாட்டை உலுக்கிய ஊழல் அந்த மாநிலத்தில் நடந்தது.
இப்படியான சூழலில்தான் அந்த மாநிலம் தேர்தலை எதிர்கொண்டது.

மாறி, மாறி முன்னிலை
ஆனால், வாக்கு எண்ணிக்கை துவங்கியது, முதலே பாஜக முன்னிலை வகித்தது. இதன்பிறகு காங்கிரஸ் முன்னிலை வகிக்க தொடங்கியது. ஆனாலும், பாஜக விடவில்லை. இரு கட்சிகளுக்கும் நடுவே கடும் போட்டி நிலவியது. யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாத சூழலில் இருந்தது.

சீட் வித்தியாசம்
காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளபோதிலும், பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் நடுவேயான சீட் வித்தியாசம் என்பது மிக குறைவு. மூன்று முறை தொடர்ச்சியாக, ஆட்சி வகிக்கும் ஒரு மாநிலத்தில், எதிர்க்கட்சிக்கு பாஜக எளிதாக தனது வெற்றியை விட்டுக்கொடுக்கவில்லை. எனவே தமிழிசை கூறியதை போல இது தோல்வியும் ஒரு வெற்றிதான் பாஜகவிற்கு. ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால், பிற எம்எல்ஏக்கள் உதவியுடன் ஆட்சியை பிடிக்க பாஜக கடும் முயற்சியை எடுக்க கூடும். அப்படியானால் தொடர்ந்து 4வது முறையாக ஆட்சியை பிடிக்க கூட வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது.

ராஜஸ்தானிலும் அனல்
ராஜஸ்தானில், சச்சின் பைலட், அசோக் கெலாட் ஆகிய இரு முக்கிய தலைவர்களின் வழிகாட்டுதலில் பாஜகவை எதிர்த்தது காங்கிரஸ். ராகுல் காந்தியின் சூறாவளி சுற்றுப் பயணம் வேறு. ஆனாலும், ராஜஸ்தானில், தொங்கு சட்டசபையை நோக்கிதான் செல்கிறது நிலைமை. ஏற்கனவே ஆட்சியிலுள்ள பாஜக அரசுக்கு எதிராக மக்களின் எதிர்ப்பு அலை வீசியபோதிலும், வெற்றியை எளிதாக விட்டுத்தரவில்லை பாஜக. அங்கும் சுயேச்சைகள் துணையை நாடி காங்கிரஸ் ஓட வேண்டிய நிலைதான் உருவாகியுள்ளது.

சட்டீஸ்கர் மட்டும்தான்
சட்டீஸ்கரில்தான் பாஜக முற்றிலுமாக சண்டர் ஆகியுள்ளது. அங்கே காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. மிசோராமில் பாஜக கத்துகுட்டி. காங்கிரஸ் தனது ஆட்சியை அங்கே இழந்துள்ளது. எனவே காங்கிரசுக்குதான் அங்கு பெரும் இழப்பு. லோக்சபா தேர்தலின்போது வலுவான கூட்டணியோடு பாஜகவை எதிர்க்காவிட்டால் பாஜக அவ்வளவு எளிதில் பணிந்துவிடாது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் அம்பலப்படுத்துகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications