லோக்சபா தேர்தல்.. 7 மாநிலங்களில் நடந்த 6ம் கட்ட வாக்குப்பதிவு.. 63% வாக்குகள் பதிவு!
டெல்லி: லோக்சபா தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 59 தொகுதிகளில் இன்று நடந்தது.
லோக்சபா தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இது வரை ஐந்து கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று ஆறாம் கட்டமாக 7 மாநிலங்களில் 59 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடந்தது.
இந்த லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் தொடங்கியது. இதுவரை 425 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. தமிழகத்திலும் 18 சட்டசபை மற்றும் 38 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இன்னும் 118 தொகுதிகளில் தேர்தல் நடக்க வேண்டும்.
இன்று 169 தொகுதிகளில் தேர்தல் நடந்தது இதில் உத்தர பிரதேசம் அதிக கவனம் பெறுகிறது. இங்குதான் இன்று அதிக இடங்களில் தேர்தல் நடந்தது . இன்றும் பாதுகாப்பு அதேபோல் அளிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு அடைந்தது.
மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகளில் தேர்தல் நடந்தது . இங்கு முக்கிய வேட்பாளர்கள் தேர்தலை சந்தித்தனர். இது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஜார்கண்டில் 4 தொகுதிகளில் தேர்தல் நடந்தது .
உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இங்கு ஐந்தாவது கட்டமாக தேர்தல் நடந்தத . இங்கு முக்கிய வேட்பாளர்கள் இன்று தேர்தலை சந்தித்தனர்.
அதேபோல் மேற்கு வங்கத்தில் ஆறாவது கட்டமாக 8 தொகுதிகளில் தேர்தல் நடந்தது . அங்கு ஏற்கனவே 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பீகாரில் 8 தொகுதிகளில் தேர்தல் நடந்தது . ஹரியானாவில் 10 இடங்களில் தேர்தல் நடந்தது .
அதேபோல் டெல்லியில் 7 இடங்களில் இன்று தேர்தல் நடந்தது . இந்த தேர்தல் காரணமாக நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
மொத்தமாக இந்த தேர்தலில் 63.4 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்த தேர்தலில் இதுவரை பதிவான வாக்குப்பதிவு விவரங்கள்:
பீகாரில் 59.40% வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் 80.51% வாக்குப்பதிவு
ஹரியானாவில் 68.17% வாக்குப்பதிவு
மத்திய பிரதேசத்தில் 64.78% வாக்குப்பதிவு
உத்தர பிரதேசத்தில் 54.26% வாக்குப்பதிவு
ஜார்கண்டில் 64.08% வாக்குப்பதிவு
டெல்லியில் 59.24% வாக்குப்பதிவு
டெல்லி:
Delhi: Senior CPI(M) leader Prakash Karat after casting his vote at a polling booth in Sanchar Bhawan #LokSabhaElections2019 #Phase6 pic.twitter.com/N1vGRiKlw8
— ANI (@ANI) May 12, 2019
டெல்லி:
Congress General Secretary for UP (East), Priyanka Gandhi Vadra after casting her vote in Delhi: It's a really important election because we are fighting to save democracy, for our country, and keeping that in mind I cast my vote.#Phase6 #LokSabhaElections2019 pic.twitter.com/Te7u4LYsFf
— ANI (@ANI) May 12, 2019
கொல்கத்தா:
West Bengal: Scuffle between BJP workers and TMC workers at polling booth number 254 in Bankura after BJP alleged rigging by TMC workers. #LokSabhaEelctions2019 #Phase6 pic.twitter.com/cENI2477kJ
— ANI (@ANI) May 12, 2019