இன்று 750 மாணவர்கள் நீட் மறு தேர்வு எழுதவில்லை.. 48% ஆப்சென்ட்.. ஷாக் தகவலை வெளியிட்ட என்.டி.ஏ!
டெல்லி: கருணை மதிப்பெண் பெற்ற 1,563 பேருக்கு இன்று நடத்தப்பட்ட நீட் மறுதேர்வை 750 பேர் எழுதவில்லை என தேசிய தேர்வு முகமை தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மே 5ஆம் தேதி இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பு நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து வெளியான நீட் தேர்வு முடிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தன.

இதுவரை நடைபெறாத வகையில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, தேர்வு ழுதிய லட்சக்கணக்கானோரில் 1563 பேருக்கு மட்டும் தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்களை அளித்ததாகக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
என்சிஇஆா்டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில மாற்றங்களாலும், சில தோ்வு மையங்களில் மாணவர்கள் நேரத்தை இழந்ததாலும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்று என்டிஏ விளக்கம் அளித்தது. உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக அறிவித்தது.
கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நாடு முழுவதும் கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தோ்வா்களுக்கு ஜூன் 23 ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஜூன் 30-ஆம் தேதி வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் நாடு முழுவதும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு மறுதேர்வு இன்று 7 மையங்களில் நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய மறு தேர்வு மாலை 5.20 மணிக்கு முடிவடைந்தது. 1,563 பேருக்கு நடத்தப்பட்ட நீட் மறுதேர்வை 750 பேர் எழுதவில்லை என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.

சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா மேகாலயாவில் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில், மறு தேர்வுக்கு தகுதி பெற்ற 1,563 பேரில் 813 பேர் மட்டுமே இன்று தேர்வு எழுதியுள்ளனர். 750 பேர் மறுதேர்வில் பங்கேற்கவில்லை. அதாவது, இன்று நடந்த நீட் மறு தேர்வில் 48% பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
சண்டிகரில் 2 பேர் மறு தேர்வு எழுத தகுதியானவர்கள், இருவரும் வரவில்லை. சத்தீஸ்கரில் 602 பேர் மறு தேர்வுக்கு தகுதி பெற்றனர், 311 பேர் வரவில்லை, 291 பேர் மறுதேர்வு செய்தனர்.
குஜராத்தில் மறுதேர்வு எழுத ஒருவர் தகுதி பெற்றிருந்த நிலையில் அவர் இன்று தேர்வை எழுதினார். ஹரியானாவில் மறு தேர்வுக்கு 494 பேர் தகுதி பெற்றிருந்தனர், அவர்களில் இன்று 207 பேர் தேர்வு எழுத வரவில்லை, 287 பேர் மறுதேர்வு செய்தனர்.
மேகாலயாவில் 464 பேர் மறு தேர்வுக்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 230 பேர் தேர்வு எழுத வரவில்லை, 234 பேர் இன்று மறுதேர்வு எழுதினர். ஒட்டுமொத்தமாக 1,563 பேரில் 813 பேர் மட்டுமே இன்று தேர்வு எழுதியுள்ளனர். 750 பேர் மறுதேர்வில் பங்கேற்கவில்லை.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications