சிறுத்தைகள் ஜாக்கிரதை.. அலர்ட் செய்த இலங்கை வனத்துறை.. போர்டு கிட்டயே நிக்குதே.. என்னா பர்பெக்ட்
டெல்லி: சிறுத்தைகள் ஜாக்கிரதை என்ற பெயர் பலகையில் எச்சரித்துள்ள நிலையில் அந்த பலகையின் தூண்களுக்கு கீழே ஒரு சிறுத்தை நிற்கும் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளில் வனங்கள் உள்ளன. இங்கு ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. சில இடங்களில் மனிதர்கள் செல்லும் சாலைகளிலேயே யானை, காட்டெருமை, சிறுத்தை, சிங்கம், புலி உள்ளிட்டவை பயணிக்கும்.

ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்லும். இவை பெரும்பாலும் காடுகளில் உணவு, நீர் இல்லாமல் போனால் அவை ஊருக்குள் உணவு, நீரை தேடி வரும். அவ்வாறு வரும் போது கொடிய மிருகங்களிடம் சிக்கினால் அவ்வளவுதான்.
இந்த விலங்குகள் நடமாடும் பகுதி குறித்து உள்ளூர் மக்களுக்கு நன்ராக தெரியும். இதனால் அவர்கள் உஷாராக இருப்பர். ஆனால் வெளியூர் மக்களுக்கு அந்த வன விலங்குகள் சாலைகளில் திரிவது குறித்து தெரியாமல் இருக்கும். இதனால் ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைப்பர்.
நீர் நிலைகளாக இருந்தால் அந்த பகுதியில் நிறைய முதலைகளும் திமிங்கலங்களும் இருப்பதாக இருந்தால் அவை குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்படும். இதற்காக பலகைகள் வைப்பர். அந்த வகையில்தான் இலங்கையில் ஓட்டன் சமவெளி தேசிய வனம் என்பது மத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது.
இது ஒரு பாதுகாக்கப்பட்ட தேசிய வனப்பூங்காவாகும். இது மொத்தம் 3159 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. 7000 அடி உயரமானது. 1969 ஆம் ஆண்டு முதல் வனவிலங்கு சரணாலயமாக உள்ளது. இங்கு பசுமை மாறாக காடுகள் உள்ளன. இலங்கையில் மிக உயரமான வனங்கள் இதுதான்.
இங்கு 4000 சாம்பர் மான்கள் உள்ளன. இலங்கைக்கே உரிய கரடிக் குரங்கு, புள்ளிப்பூனைகள் உள்ளிட்டவை உள்ளன. இங்கு பேக்கர்ஸ் நீர் வீழ்ச்சியும் உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவர். அவ்வாறு வருவோர் காட்டு விலங்குகளிடம் சிக்காமல் இருக்க ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஒரு இடத்தில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ஜாக்கிரதையாக இருங்கள், எப்போதும் கவனமுடன் செல்லுங்கள் என அறிவிப்பு பலகை உள்ளது. அதில் ஒரு சிறுத்தையின் புகைப்படமும் உள்ளது. ஒரு முறை அந்த அறிவிப்பு பலகைக்கு கீழேயே ஒரு சிறுத்தை இருக்கும் புகைப்படம் யார் எடுத்தது என தெரியவில்லை.
ஆனால் வைரலாகி வருகிறது. இதை விட சிறந்த முறையில் யாராலும் அறிவிப்பு பலகைகளை வைக்க முடியுமா என்ன என்ற கேள்வியும் அதிகரித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications