தவறான முத்தலாக் முறைக்கு தடை.. பாலின சமத்துவத்தில் மைல்கல்.. குடியரசுத் தலைவர் பெருமிதம்
சமத்துவமற்ற முத்தலாக் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: சமத்துவமற்ற முத்தலாக் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
இன்று முத்தலாக் தடை சட்ட மசோதா ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் முத்தலாக் நடைமுறை கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தனை நாட்கள் இந்த சட்டம் குடியரசுத் தலைவர் அனுமதி உடன் அவசர சட்டமாக இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்தது. இரண்டு முறை இது அவசர சட்டமாக கொண்டு வரப்பட்டு நடைமுறையில் இருந்தது.
கடைசியில் தற்போது வெற்றிகரமாக இந்த மசோதா இரண்டு அவையிலும் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாகி உள்ளது. இதுகுறித்து தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட் செய்துள்ளார்.
Passage in the Rajya Sabha of Muslim Women (Protection of Rights on Marriage) Bill completes Parliament's approval of ban on the inequitable practice of triple talaq. A milestone in the quest for gender justice; a moment of satisfaction for the entire country #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) July 30, 2019
அதில், இஸ்லாமியா பெண்கள் மசோதா (முத்தலாக் மசோதா) ராஜ்ய சபாவில் வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டு, சமத்துவமற்ற முத்தலாக் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தில் இது ஒரு மைல்கல். மொத்த நாட்டிற்கும் இது திருப்திகரமான தருணம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
-
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications