டெல்லி: மெகா கூட்டணியை தவற விட்ட ஆம் ஆத்மி- காங்... மீண்டும் பாஜக கோட்டையாக விஸ்வரூபம்?
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தலில் உ.பி., ஜார்க்கண்ட் பாணியில் ஆம் ஆத்மி- காங்கிரஸ் மெகா கூட்டணி அமைக்காமல் போனதால் டெல்லி மீண்டும் பாஜக கோட்டையாகும் என்கின்றன கள நிலவரம்.
லோக்சபா தேர்தலில் 6-வது கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. டெல்லியின் 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது.

டெல்லியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், விளையாட்டு வீரர்கள் கவுதம் காம்பீர், விஜேந்திரசிங் உள்ளிட்டோர் நட்சத்திர வீரர்கள். டெல்லியில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு முடிவுகளையே தந்திருக்கிறது.
2013 சட்டசபை தேர்தலில்; பாஜகவின் வாக்கு சதவீதம் 13% அதிகரித்தது. ஆம் ஆத்மிக்கு 3.4% வாக்குகள் கூடுதலாக கிடைத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 9.4%; பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4.3% வாக்குகள் குறைந்தன.
2014 லோக்சபா தேர்தலில் அத்தனை தொகுதிகளையும் பாஜக அள்ளிச் சென்றது. ஆனால் 2015 சட்டசபை தேர்தலில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு வாக்களித்தவர் ஆம் ஆத்மியை தேர்ந்தெடுத்தனர். அக்கட்சி மொத்தம் உள்ள 70 இடங்களில் 60ஐ கைப்பற்றியது. ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதம் 21.4% அதிகரித்தது. பாஜகவின் வாக்கு விகிதம் 14.1% ஆக குறைந்தது. லோக்சபா தேர்தலை ஒப்பிடுகையில் காங்கிரஸுக்கு 5.4% வாக்குகள் குறைவாக கிடைத்தன.
2017-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் நிலைமை மீண்டும் தலைகீழானது. ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதம் 26.2% ஆனது. பாஜகவுக்கு மிக அதிக வாக்குகள் கிடைத்தன. டெல்லியைப் பொறுத்தவரையில் இப்படித்தான் ஒவ்வொரு தேர்தல் நிலவரமும் மாறி மாறியே இருக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தில் பரம எதிரிகளாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதியும் கை கோர்த்ததால் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு மாநில்ங்களிலும் மெகா கூட்டணிகளை அமைத்து பாஜகவுக்கு செக் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் டெல்லியில் ஆம் ஆத்மியும் காங்கிரஸும் மெகா கூட்டணி அமைக்க தவறிவிட்டதால் பாஜக மீண்டும் 7 தொகுதிகளையும் கைப்பற்றிவிடும் நிலைதான் உள்ளது என்கின்றனர் டெல்லிவாசிகள்.












Click it and Unblock the Notifications