"இந்தியா கூட்டணி என்று ஒன்று இல்லை.." விலகிய ஆம் ஆத்மி.. அதிர்ச்சி கொடுத்த கெஜ்ரிவால்! என்ன காரணம்
டெல்லி: கடந்த லோக்சபா தேர்தலில் நாட்டில் உள்ள பல்வேறு எதிர்க்கட்சிகளும் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியது. நாட்டின் பல மாநிலங்களில் இந்தியா கூட்டணி ஒரே அணியில் போட்டியிட்டன. இருப்பினும், லோக்சபா தேர்தலுக்குப் பிறகு இந்தக் கூட்டணியில் தொடர்ச்சியாகப் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்தியா கூட்டணி நன்றாக இருந்தாலும் மற்ற மாநிலங்களில் பிரச்சனை தொடர்ந்தே வருகிறது. இதற்கிடையே இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி விலகிவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை, அதாவது ஜூலை 21ம் தேதி தொடங்குகிறது. சுமார் ஒரு மாதம் இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோல எதிர்க்கட்சிகளும் இதில் பல முக்கிய விவகாரங்களை எழுப்பத் திட்டமிட்டுள்ளது.

ஆம் ஆத்மி விலகல்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் திட்டம் குறித்து ஆலோசிக்க நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக இந்தியா எதிர்க்கட்சிக் கூட்டத்தைக் காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. இந்தச் சூழலில் தான் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், இதனால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நடக்கும் எதிர்க்கட்சிக் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்காது என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.
இந்தியா கூட்டணியில் இல்லை
இது குறித்து சஞ்சய் சிங் கூறுகையில், "ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே இதைத் தெளிவுபடுத்திவிட்டார். எங்கள் கட்சி இந்தியா கூட்டணியில் இல்லை. லோக்சபா தேர்தலுக்காக மட்டுமே இந்த கூட்டணி அமைக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களிலும் எங்கள் கட்சி தனித்துத் தான் போட்டியிட்டது" என்றார்.
2024 லோக்சபா தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டன. இருப்பினும், அதன் பிறகு நடந்த ஹரியானா மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் அவை தனித்தனியாகவே போட்டியிட்டன. பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
தனித்தே போட்டியிட்டோம்
இதையும் குறிப்பிட்ட சஞ்சய் சிங், "லோக்சபா தேர்தலுக்குப் பிறகு இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் நாங்கள் தனியாகத் தான் போட்டியிட்டோம். பஞ்சாப் மற்றும் குஜராத்தில் நடந்த இடைத்தேர்தல்களிலும் தனியாகவே போட்டியிட்டோம். அதேநேரம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுடன் இணக்கமாகச் செயல்படுவோம். நாடாளுமன்ற விவகாரங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவை நாங்கள் பெற்று வருகிறோம். அவர்களும் எங்கள் ஆதரவைப் பெறுகிறார்கள்.
வலுவான மற்றும் சக்திவாய்ந்த எதிர்க்கட்சியாக நாங்கள் எப்போதும் செயல்பட்டு வருகிறோம். எந்த பிரச்சனைகள் இருந்தாலும், அவற்றை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்" என்று அவர் கூறினார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தக் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கச் சனிக்கிழமை மாலை இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற உள்ளது. பீகாரில் தேர்தல் சிறப்புத் திருத்தம், பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்துர் ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. ஆம் ஆத்மி மட்டுமின்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications