Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜேஎன்யூ தாக்குதலை திட்டமிட்டு செய்த ஏபிவிபி.. பரபர வாட்ஸ் ஆப் ஆதாரங்கள்.. விசாரிக்கும் டெல்லி போலீஸ்

ஜேஎன்யூவில் மாணவர்கள் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏபிவிபி மாணவர்கள் ஈடுப்பட்டது வாட்ஸ் ஆப் ஆதாரங்கள் மூலம் உறுதியாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜேஎன்யூவில் மாணவர்கள் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏபிவிபி மாணவர்கள் ஈடுப்பட்டது வாட்ஸ் ஆப் ஆதாரங்கள் மூலம் உறுதியாகி உள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக 60 பேரில் 37 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த வாரம் டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள்.நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் அன்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள்.

இதில் மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் சரமாரியாக தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலை ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபிதான் நடத்தியது என்று புகார் உள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்த ஏபிவிபி மாணவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

அதிர்ச்சி அளிக்கிறது

அதிர்ச்சி அளிக்கிறது

இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் வெளியாகி வருகிறது. இதில் இடதுசாரி மாணவர்களை, அங்கிருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள்தான் தாக்கியது என்பது குறித்து நிறைய ஆதாரங்கள் வெளியானது. வடஇந்திய ஊடகங்கள் இது தொடர்பாக நிறைய உண்மைகளை வெளியிட்டது.

இன்று எப்படி

இன்று எப்படி

இந்த நிலையில் இன்று டெல்லி சார்பாக சில முக்கிய தகவல்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜேஎன்யூ தாக்குதலில் ஈடுபட வேண்டும் என்பதற்காக வாட்ஸ் ஆப் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு இடதுசாரிகளுக்கு எதிராக ஒன்று சேர்வோம் என்று பொருள்படும் வகையில் 'Unity against Left' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஏபிவிபி

ஏபிவிபி

இதில் இருக்கும் 60 பேரில் மொத்தம் 37 பேரின் அடையாளத்தை போலீஸ் கண்டுபிடித்துள்ளது. இதில் எல்லோரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள். இதில் 10 பேர் அங்கு படிக்காத வெளியாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இருக்கும் 60 பேரில் மொத்தம் 37 பேரின் அடையாளத்தை போலீஸ் கண்டுபிடித்துள்ளது. இதில் எல்லோரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள். இதில் 10 பேர் அங்கு படிக்காத வெளியாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்எஸ்எஸ் அமைப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்பு

உள்ளே இருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி உதவியுடன் இவர்கள் ஹாஸ்டல் உள்ளே வந்து இருக்கிறார்கள். இதில் ஏபிவிபி அமைப்பின் ஜேஎன்யூ செயலாளர் மனிஷ் ஜங்கித் இருந்ததும் உறுதியாகி உள்ளது. இவர்தான் இந்த திட்டத்தை முன்னிருந்து வகுத்து இருக்கிறார்.

என்ன பிளான்

என்ன பிளான்

அந்த குழுவில் மாணவர்களை எப்படி தாக்க வேண்டும். எங்கிருந்து இரும்பு பொருட்கள், ஆசிட்களை கொண்டு வர வேண்டும். கேட் வாசலில் எத்தனை பேர் நிற்க வேண்டும், என்று விவாதித்து இருக்கிறார்கள். மாணவர்களை தாக்க இதில்தான் பிளான் போட்டுள்ளனர்.

மழுப்பல்

மழுப்பல்

ஆனால் ஜேஎன்யூ செயலாளர் மனிஷ் ஜங்கித் என்னுடைய போன் உடைந்து, அதை சரி செய்ய கொடுத்த போது, யாரோ தன்னை அந்த குழுவில் சேர்த்துவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார். இவரை போலீசார் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+