பிடதி முதல் கைலாசா வரை.. நித்யானந்தாவை இன்று வரை பிரியாத நடிகை ரஞ்சிதா? கூடவே இருக்கும் ஒரே சிஷ்யை?
டெல்லி: நடிகை ரஞ்சிதா இன்று வரை நித்யானந்தாவுடன்தான் இருக்கிறார் என புலனாய்வு பத்திரிகை செய்து வெளியிட்டிருக்கிறது.
நித்யானந்தாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டாத குறையாக அவர் குறித்து சமூகவலைதளங்களில் சிலர் தகவல்களை பரப்பி வந்தனர்.
இந்த நிலையில்தான் திரும்பி வந்துட்டேனு சொல்லு என நித்யானந்தா பேஸ்புக்கில் பதிவு போட்டு அவர் உயிருடன் இல்லை என்றே இன்று வரை நெட்டிசன்களிடையே தகவல்கள் பரவி வருகின்றன.

பேஸ்புக் பதிவுகள்
காரணம் அவர் பதிவிட்டதாக பேஸ்புக் பதிவுகள் வருகின்றனவே தவிர அவர் குறித்த வீடியோ ஏதும் வெளியாகவில்லை. சத்சங்கம் வெளிவரவில்லை. உடம்புக்கு ஒன்றும் இல்லாத நிலையில் மருத்துவ பரிசோதனைகள் முடிவுகளும் நார்மலாக இருக்கும் நிலையில் அவரால் ஏன் எழுந்து உட்கார முடியவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

நித்யானந்தாவுக்கு என்னாச்சு
நித்யானந்தாவுக்கு என்னாச்சு என்பது குறித்து நக்கீரன் புலனாய்வு பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது: நித்யானந்தாவை சீடர்கள் விரும்புவதற்கு காரணம் அவரிடம் இருக்கும் ஹீலிங் பவர் (நோயை குணமாக்கும் சக்தி). நான் கடவுள் என சொல்வது, செக்ஸ் புகாரில் சிக்குவது ஆகிய இரு விஷயங்களில்தான் நித்யானந்தாவுக்கு ஏதோ ஆகியிருக்கிறது.

நித்தியுடன் இருக்கும் ரஞ்சிதா
கைலாசா என நித்யானந்தா கூறும் தீவில் இன்று வரை நடிகை ரஞ்சிதா இருக்கிறார். 2010 ஆம் ஆண்டு நடிகை ரஞ்சிதா- நித்தி வீடியோ வெளியான பிறகும் கூட அவரை விட்டு அகலாமல் இருக்கிறார் ரஞ்சிதா. நித்யானந்தா கடந்த சில மாதங்களாக நேரலையில் வருவதே இல்லை. பேஸ்புக் பதிவுதான் போடுகிறார்.

இட்லி சாப்பிட முடியவில்லை
அதிலும் தன்னால் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை, 20 நிமிடங்களுக்கு மேல் தூங்க முடியவில்லை. தனது நாடி நரம்புகள் எல்லாம் சமாதி நிலையை அனுபவித்து வருவதாக தெரிவிக்கிறார். ஆனால் மருத்துவர்களால் எனக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என குழப்பத்தில் உள்ளதாக கூறுகிறார். இவர் கூறும் தகவல்கள் நிரூபிக்க முடியாதவை.












Click it and Unblock the Notifications