Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: புதிதாக மூன்று விமான நிலையங்களை 50 ஆண்டுகால குத்தகைக்கு அதானி நிறுவனம் பெற்றுள்ளது. இதை காதலர் தின பரிசாக பிரதமர் மோடி அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

அகமதாபாத், ஜெய்பூர், லக்னோ, கவுகாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு விமான நிலையங்களை பராமரிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒப்புதல் அளித்திருந்தது.

adani gets 3 airport contract : congress attacks this is valentines day gift

இதன்படி தனியார்கள் ஏலம் எடுக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் பல நிறுவனங்கள் போட்டியிட்ட. இதில் அதிக மொத்தம் பத்து நிறுவனங்கள் ஒப்பந்தத்தை பெற போட்டியிட்டன. இதை அதிக பணம் கொடுத்து ஏலம் எடுக்க அதானி நிறுவனம் முன்வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லக்னோ, அகமதாபாத், மங்களூரு விமான நிலையங்களை 50 ஆண்டுகால குத்தகைக்கு அதானி நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்துள்ளது.. இதற்கான ஒப்பந்தம் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் அதானி நிறுவனம் இடையே கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே திருவனந்தபுரம் விமான நிலையம் மற்றும் கவுகாத்தி விமான நிலையங்களையும் அதானி குழுமே குத்தகைக்கு பெற்றுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மீம்ஸ் போட்டு கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, தொழிலதிபர் அதானிக்கு பிரதமர் மோடி காதலர் தினத்தன்று அளித்த பரிசு என விமான நிலைய குத்தகை விவகாரத்தை விமர்சித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+