இந்தியாவில் மீண்டும் வேகமெடுத்த கொரோனா.. 3 மாதங்களில் இல்லாத அளவு பாதிப்பு.. திணறும் 2 மாநிலங்கள்!
டெல்லி: இந்தியாவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஜனவரி மாதத்திற்கு கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு தினசரி கொரோனா பாதிப்பி எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 ஆயிரத்து 233 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மார்ச் மாதத்திற்கு பின் இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா அதிகரிப்புக்கு காரணம் என்ன?
இந்தியாவில் திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்வதற்கு மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநிலங்களில் பாதிப்பு அதிகமானதே காரணமாக பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் மும்பையில் மட்டும் ஆயிரத்து 242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 80% கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. கேரளா மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 271 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 7 பேர் பலி
நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரு நாளில் மட்டும் 7 பேர் உயிரிழந்தனர். அதில் கேரளாவில் 5 பேரும், உத்தரப் பிரதேசம் மற்றும் தலைநகர் டெல்லியில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தோர் என்ணிக்கை 5,24, 715ஆக உயர்ந்துள்ளது.

நடவடிக்கை
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது குறித்து மும்பை மாநகராட்சி ஆணையர் கூறுகையில், கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை கண்காணித்து வருகிறோம். இதனால் கொரோனா சோதனைகளை அதிகரித்த உத்தரவிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

தடுப்பூசி கணக்கு என்ன?
நாடு முழுவதும் நேற்று மட்டும் 14,94,086 டோஸ் தடுப்பூசிகளும், இதுவரை 194 கோடியே 43 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், நேற்று ஒரு நாளில் 3,13,361 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
-
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications