Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

60 மணி நேரம்.. பிபிசி அலுவலகத்திலேயே தங்க வைக்கப்பட்ட ஊழியர்கள்! முடிவுக்கு வந்த ஐடி ஆய்வு!

3 நாட்களாக பிபிசி அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை ஆய்வு நிறைவடைந்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 3 நாட்களாக டெல்லி மற்றும் மும்பை பிபிசி அலுவலகங்களில் வருமானத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வு இரவு 11 மணியளவில் முடிவுக்கு வந்திருக்கிறது. சுமார் 60 மணி நேரமாக தொடர்ந்த வருமான வரித்துறையினர் ஆய்வின் போது, பிபிசி ஊழியர்கள் பலரும் அலுவலகத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இதனையடுத்து நடந்த கலவரத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி செய்தி ஊடகம் India: The Modi Question எனும் ஆவணப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட்டது. இந்த படத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனத்தை தெரிவித்தது. இது பிரதமர் மோடியின் புகழை மழுங்கடிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக பாஜக எம்பிகள் பலரும் கூறினர்.

 மத்திய அரசு தடை

மத்திய அரசு தடை

இதனையடுத்து இப்படத்தை தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021ன் கீழ் தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் போன்ற தளங்களில் இப்படம் நீக்கப்பட்டது. ஆனால் இந்நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கேரளா தொடங்கி டெல்லி வரை இந்த ஆவணப்படம் பல்வேறு பகுதிகளில் திரையைிடப்பட்டது.

பிபிசி ஆவணப்படம்

பிபிசி ஆவணப்படம்

ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் இப்படம் திரையிடப்பட்டபோது இந்திய மாணவர் சங்கத்தினருக்கும், வலதுசாரி அமைப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதேபோல ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் இப்படத்தை திரையிட முயன்றதால் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து நாடு முழுவதும் கண்டன குரல்கள் வலுத்தன. கேரளாவில் கல்வி நிலையங்கள் தாண்டி பொது இடங்களிலும் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இப்படத்தை திரையிட்டன.

60 மணி நேரம் ஆய்வு

60 மணி நேரம் ஆய்வு

இந்த நிலையில் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தினர். இதற்கு முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் மற்றும் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். நேற்று முன்தினம் தொடங்கிய வருமான வரித்துறையின் ஆய்வு, மூன்று நாட்களாக தொடங்கியது. கிட்டத்தட்ட சுமார் 60 மணி நேரம் ஆய்வு தொடர்ந்தது.

அலுவலகத்திலேயே இருந்த ஊழியர்கள்

அலுவலகத்திலேயே இருந்த ஊழியர்கள்

இந்த நிலையில் பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு நேற்று இரவு 11 மணியளவில் நிறைவடைந்துள்ளது. இந்த ஆய்வின் போது ஊழியர்களில் 10 பேர் அலுவலகத்திலேயே இருந்துள்ளனர். தங்கள் ஊழியரின் செல்போன் உட்பட அனைத்து மின்னணு பொருட்களையும் ஆய்வு நடத்தியவர்கள் கேட்கும்போது திறந்து காட்ட வேண்டும் என்று பிபிசி உத்தரவிட்டிருந்தது. அதற்கேற்ப ஊழியர்கள் ஒத்துழைத்ததாக தெரிவிக்கப்பட்டது.

பிபிசி விளக்கம்

பிபிசி விளக்கம்

இதுகுறித்து பிபிசி ஊடகம் சார்பில் கூறுகையில், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டுச் சென்று விட்டார்கள். அதிகாரிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த விவகாரம் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+