குஜராத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் கொரோனா மையத்தில் தீவிபத்து.. அடுத்தடுத்த சம்பவங்களால் அதிர்ச்சி
டெல்லி: குஜராத்தை தொடர்ந்து ஆந்திராவிலும் கொரோனா தனிமை மையத்தில் தீவிபத்து நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 21 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த மே மாதம் முதலே நாடு முழுவதிலும் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன.
இதனால் ஸ்டேடியங்கள், கல்லூரிகள், வர்த்தக மையங்கள், ஆய்வுக் கூடங்கள் உள்ளிட்ட பெரிய பரபரப்பளவு கொண்ட இடங்கள் கொரோனா தனிமை மையங்களாக மாற்றப்படுகின்றன.

குஜராத்தில்
அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான உடல்நிலை உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். லேசான பாதிப்பு உள்ளவர்கள் மேற்கண்ட தனிமை மையங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். இதற்காக மூடிக்கிடக்கும் நட்சத்திர ஹோட்டல்களும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் குஜராத்தில் கடந்த 6-ஆம் தேதி ஒரு தீவிபத்து ஏற்பட்டது.

8 பேர் பலி
அதாவது அகமதாபாத்தில் உள்ள ஷ்ரே மருத்துவமனையின் 4-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 6-ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போன்றதொரு சம்பவம் தற்போது விஜயவாடாவிலும் நடந்துள்ளது.

சொர்ணா பேலஸ்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொர்ணா பேலஸ் என்ற ஹோட்டல் கொரோனா தனிமை மையமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 50 க்கும் மேற்பட்ட நோயாளிகளும், மருத்துவர்களும, செவிலியர்களும், இதர தொழிலாளர்களும் தங்கியுள்ளார்கள். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு இங்கு தீவிபத்து ஏற்பட்டது.

பலி எண்ணிக்கை உயரக் கூடும்
இதனால் அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் அங்கும் இங்கும் ஓடிச் சென்று தப்ப முயன்றனர். அப்போது மாடியிலிருந்தும் சிலர் குதித்தனர். எனினும் தீயில் கருகி இதுவரை மொத்தம் 7 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தீவிபத்திற்கான காரணம் குறித்து ஆராயப்படுகிறது. குஜராத்தில் தனியார் மருத்துவமனையிலும், ஆந்திராவில் தனிமை மையத்திலும் நடந்துள்ள இந்த விபத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications