மோடி பக்கத்து சீட்லதான் உட்காருவேன் ஆமா.. அடம் பிடித்தாராம் தென்னாப்பிரிக்கா அதிபர்.. ஏன்?
டெல்லி: சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியபோது பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று இருந்தார். இதன்பிறகு, தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசா பிரதமர் மோடி அருகே அமர விரும்பி அடம்பிடித்த சம்பவம் நடந்ததாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நிலவில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 3 வல்லரசு நாடுகள் மட்டுமே கால்பதித்து இருந்தன. இந்த வரிசையில் தற்போது 4வது நாடாக இந்தியா சந்திரயான் 3 திட்டம் மூலம் நிலவில் விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது.

மேலும் இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. அதாவது சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 23ம் தேதி நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் சாப்ட் லேண்டிங் முறையில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சந்திரயான் 2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கிய நிலையில் இந்த முறை இஸ்ரோ விஞ்ஞானிகள் திறம்பட செயல்பட்டு சாதனை படைத்தனர். தற்போது நிலவில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் பல்வேறு ஆய்வுகளை அசத்தலாக மேற்கொண்டு வருகிறது. நிலவின் தென்துருவத்தில் ஆக்சிஜன், சல்பர், குரோமியம், டைட்டேயம் உள்பட 8 வகையான தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளது.
முன்னதாக நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்காவில் இருந்தார். ஜேகனஸ்பர்க்கில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று இருந்தார். இதனால் அவரால் நேரடியாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. மாறாக அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியதை பார்த்து விஞ்ஞானிகளை பாராட்டினார். மேலும் நாட்டு மக்களுக்குமு் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அதன்பிறகு தென்னாப்பிரிக்கா, கிரீஸ் நாடுகளின் சுற்றுப்பயணத்தை நேற்று முடித்த பிரதமர் மோடி கடந்த 26ம் தேதி நேரடியாக பெங்களூர் வந்து இறங்கினார். இதையடுத்து பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு பிரதமர் மோடி சென்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்பட சந்திரயான் 3 திட்டத்தின் விஞ்ஞானிகளை சந்தித்து நேரில் பாராட்டு தெரிவித்தார்.
இந்நிலையில் தான் சந்திரயான் - 3 வெற்றிக்கு பிறகு தென்ஆப்பிரிக்காவில் நடந்த சுவாரசிய சம்பவம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கி உள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சந்திரயான் 3 குறித்த கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: கடந்த வாரம் தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் பிரிக்ஸ் மாநாடு நடந்தது. பிரதமர் மோடியுடன் நான் பங்கேற்றேன். அப்போது தான் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து உலக நாடுகளும், அதன் விண்வெளி ஆய்வு ஏஜென்சிகளும் அரசை பாராட்டியது.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் நேரடியாக வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக கூற வேண்டும் என்றால் தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ரமாபோசா தனது நாட்டுக்கான வெற்றி என்றே கூறினார். மேலும் பிரதமர் மோடியின் அருகே அமர விரும்புவதாகவும், மோடியின் அருகே அமர்வது எனக்கும் அவரது ஆற்றலை தரும் என நம்புவதாக தெரிவித்தார். இப்படி சந்திரயான் 3 திட்டம் ஒவ்வொரு விஷயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதன்பிறகு பிரதமர் மோடி சந்திரயான் 3 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்தியாவின் நிலவு ஆய்வு பயணத்துக்கு நண்பர் ரமபோசா நிறைய பாராட்டுகளை வழங்கியுள்ளார். இந்த வெற்றி ஒரு நாட்டுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட வெற்றியாக இல்லாமல் மனித குலத்துக்கான வெற்றியாக ஏற்றுக்கொள்ளப்படுவது தான் எங்களுக்கு பெருமையாக இருக்கும் என பிரதமர் மோடி கூறினார்.
மேலும் இன்னொரு விஷயமும் எனது நினைவில் உள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் யூ வடிவ மேஜையில் 100 முதல் 150க்கும் அதிகமானவர்கள் அமர்ந்து இருந்தோம். சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது அனைவரும் இயல்பாகவே எழுந்து நின்றனர். அதன்பிறகு பிரதமர் மோடி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதன்மூலம் சந்திரயான்-3 என்பது இந்தியாவின் சாதனை என்பது மட்டுமின்றி உலகத்துக்கான சாதனை என்பதை நாம் உணரலாம்'' என்றார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications