ராஜ்ய சபா எம்பிக்கள் நீக்கம்... உண்ணாவிரதப் போட்டி... லிஸ்டில் இணைந்தார் சரத் பவார்!!
டெல்லி: ராஜ்ய சபா நடவடிக்கைகளில் இருந்து இந்த தொடர் முழுவதும் நீக்கப்பட்டு இருக்கும் உறுப்பினர்களுக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
ராஜ்ய சபாவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை வேளாண் மசோதா தாக்கல் செய்தபோது, எதிர்க்கட்சி எம்பிக்கள் விதிமுறைகளை மீறி வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி 8 எம்பிக்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து ராஜ்யசபா தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

இதன்படி, திரிணாமுல் காங் எம்பி டெரக் ஓ பிரைன், டோலா சென், இளமாறம், கதீரம், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்பி ராஜீவ் சாதவ், நசீர் ஹூசைன், ரிபுன் போரேன், மார்க்சிஸ்ட் எம்பி கேகே ராகேஷ் ஆகிய 8 எம்பிக்கள் இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்ள முடியாது.
இதையடுத்து ராஜ்ய சபா தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு துணைத்தலைவர் ஹரிவன்ஷ் சிங் எழுதி இருந்த கடித்ததில், ''எம்பிக்கள் என்னை மிகவும் அவமரியாதை செய்தனர். என் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் என்னால் ஒரு நாள் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. இதைக் கண்டித்து ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ராஜ்ய சபாவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கும் எம்பிக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்கள் இந்த தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் உறுப்பினர்களுக்கு ஆதரவாக இன்று முழுவதும் நான் எதையும் சாப்பிடப் போவதில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உறப்பினர்கள் மீதான நடவடிக்கைகளை கண்டித்து இந்த கூட்டத் தொடர் முழுவதும் இரு அவைகளிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்று காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சிவ சேனா ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. லோக் சபாவில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications