தேசியக்கொடியுடன் நேரு.. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்ற ராகுல்! டுவிட்டரில் நடந்த மாற்றம்!
டெல்லி: இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தங்களின் டுவிட்டர் கணக்குகளின் புரொபைல் படங்களை மாற்றியுள்ளனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டு விழா ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது ஆண்டு சுதந்திரதினத்தை சிறப்பாக ஒரு ஆண்டு வரை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
இதன் தொடர்நச்சியாக 75வது சுதந்திர தினமானது இந்தியாவில் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. 'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' எனும் பெயரில் இந்த கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வீடுகளில் தேசியக்கொடி
இந்நிலையில் தான் 'ஹர் கர் திரங்கா'(இல்லம்தோறும் மூவர்ணக் கொடி) எனும் இயக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதாவது 75 வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்றும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

டிபியை மாற்றிய மோடி
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ‛மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15 வரை மக்கள் தங்கள் சமூகவலைதளப் பக்கங்களின் முகப்பு பக்கத்தில் தேசியக் கொடியை வைக்கும்படி கேட்டு கொண்டார். இதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் உள்பட அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் தேசியகொடியை புரொபைல் படமாக நேற்று மாற்றினார்.

அமித்ஷா-ஜேபி நட்டா மாற்றம்
இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களும் தங்கள் புரொபைல் படமாக தேசியக் கொடியை வைத்துள்ளனர். மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படத்தை தேசியக்கொடியாக மாற்றி வருகின்றனர்.

நேருவின் படத்தை வைத்த ராகுல்காந்தி
இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார். அதில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தேசியக்கொடியை ஏந்திருக்கும் படத்தை அவர் தனது புரொபைல் படமாக மாற்றியுள்ளார். இதில் ஜவஹர்லால் நேருவின் படம் பிளாக் அன்ட் வெயிட் வகையில் உள்ளது. மேலும் புரொபைல் படம் மாற்றம் குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், "தேசியக்கொடி (மூவர்ணக் கொடி) நாட்டின் பெருமை. அது ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் உள்ளது'' என தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தியும் மாற்றினார்
இதேபோல் ராகுல்காந்தியின் சகோதரரான பிரியங்கா காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார். இவரும் தேசியக்கொடியை ஜவஹர்லால் நேரு கையில் ஏந்தியிருக்கும் படத்தை புரொபைல் படமாக மாற்றியுள்ளார். அதில், ‛‛நமது பிரியமான தேசியக்கொடி நம் வெற்றிகரமான நாட்டின் அடையாளம். நமது கொடி உயர பறக்கட்டும்'' என கூறியுள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications