தேசியக்கொடியுடன் நேரு.. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்ற ராகுல்! டுவிட்டரில் நடந்த மாற்றம்!
டெல்லி: இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தங்களின் டுவிட்டர் கணக்குகளின் புரொபைல் படங்களை மாற்றியுள்ளனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75ம் ஆண்டு விழா ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது ஆண்டு சுதந்திரதினத்தை சிறப்பாக ஒரு ஆண்டு வரை கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
இதன் தொடர்நச்சியாக 75வது சுதந்திர தினமானது இந்தியாவில் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. 'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' எனும் பெயரில் இந்த கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வீடுகளில் தேசியக்கொடி
இந்நிலையில் தான் 'ஹர் கர் திரங்கா'(இல்லம்தோறும் மூவர்ணக் கொடி) எனும் இயக்கத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதாவது 75 வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்றும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 வரை வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

டிபியை மாற்றிய மோடி
மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ‛மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15 வரை மக்கள் தங்கள் சமூகவலைதளப் பக்கங்களின் முகப்பு பக்கத்தில் தேசியக் கொடியை வைக்கும்படி கேட்டு கொண்டார். இதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் உள்பட அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் தேசியகொடியை புரொபைல் படமாக நேற்று மாற்றினார்.

அமித்ஷா-ஜேபி நட்டா மாற்றம்
இதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களும் தங்கள் புரொபைல் படமாக தேசியக் கொடியை வைத்துள்ளனர். மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என அனைவரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படத்தை தேசியக்கொடியாக மாற்றி வருகின்றனர்.

நேருவின் படத்தை வைத்த ராகுல்காந்தி
இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார். அதில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தேசியக்கொடியை ஏந்திருக்கும் படத்தை அவர் தனது புரொபைல் படமாக மாற்றியுள்ளார். இதில் ஜவஹர்லால் நேருவின் படம் பிளாக் அன்ட் வெயிட் வகையில் உள்ளது. மேலும் புரொபைல் படம் மாற்றம் குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், "தேசியக்கொடி (மூவர்ணக் கொடி) நாட்டின் பெருமை. அது ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் உள்ளது'' என தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தியும் மாற்றினார்
இதேபோல் ராகுல்காந்தியின் சகோதரரான பிரியங்கா காந்தியும் தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை மாற்றியுள்ளார். இவரும் தேசியக்கொடியை ஜவஹர்லால் நேரு கையில் ஏந்தியிருக்கும் படத்தை புரொபைல் படமாக மாற்றியுள்ளார். அதில், ‛‛நமது பிரியமான தேசியக்கொடி நம் வெற்றிகரமான நாட்டின் அடையாளம். நமது கொடி உயர பறக்கட்டும்'' என கூறியுள்ளார்.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது?












Click it and Unblock the Notifications