ஊழல் புகார்.. ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கான் கைது! இரு துப்பாக்கிகளும் பறிமுதல்! டெல்லியில் பரபர
டெல்லி: தலைநகர் டெல்லியில் இரு ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் கைது செய்யப்பட்டு உள்ளார்.
டெல்லியில் இப்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குச் சமீபத்தில் தான் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடுகளில் ரெய்டு நடத்தி இருந்தனர்.
இதுபோன்ற ரெய்டுகள் இப்போதைக்கு அங்கு முடிவதாகத் தெரியவில்லை. இப்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் ஊழல் புகார் ஒன்றில் செய்யப்பட்டு உள்ளார்.

ஊழல் புகார்
ஊழல் புகார் தொடர்பாக போலீசார் அவரிடம் முதலில் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து பல இடங்களில் போலீசார் ரெய்டு நடத்திய நிலையில், மாலையில் டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவினர் அமானதுல்லா கானை கைது செய்தனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி வக்பு வாரியத்தில் சட்டவிரோதமாகச் சிலரை நியமனம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை
2020ஆம் ஆண்டு இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அதன் பின்னர் நடத்தப்பட்ட ரெய்டை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தில்லி வக்பு வாரியத்தின் தலைவராக அமனத்துல்லா கான் இருந்த போது, விதிமுறைகளை 32 பேரைச் சட்டவிரோதமாக பணியமர்த்தினார்.

கைது
டெல்லி வக்பு வாரியத்தின் அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி, இந்த சட்டவிரோத நியமனத்திற்கு ஆட்சேர்ப்புக்கு எதிராகத் தெளிவாக அறிக்கை அளித்துள்ளார். மாலை ரெய்டு நடந்த போது, அமானதுல்லா கானின் உறவினர்கள் அதிகாரிகளைத் தாக்கி உள்ளனர். டெல்லி வக்பு வாரியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற புகாரும் அவர் மீது உள்ளது.

துப்பாக்கி
அவரது வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் 24 லட்சம் ரொக்கமும், சட்டவிரோதமான இரு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டது" என்று கூறப்பட்டு உள்ளது. டெல்லி வக்பு வாரியத்தில் சட்டவிரோதமாக நியமனம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மறுப்பு
இருப்பினும், இந்தக்குற்றச்சாட்டுகளை ஆம் ஆத்மி முற்றிலுமாக மறுத்து உள்ளது. ஆம் ஆத்மி தனது ட்விட்டரில், "அமானதுல்லா கானின் கைது ஆதாரமற்றது. அவர் மீதான வழக்கு முற்றிலும் பொய்யானது. அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. இது ஆம் ஆத்மி கட்சியை அவமானப்படுத்தவும் எம்எல்ஏவின் புகழைக் கெடுக்கவும் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சியாகும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
-
தூக்கியடிக்கப்படும் செல்வப்பெருந்தகை.. ராகுல் காந்தி பெரிய முடிவு? கையில் லிஸ்ட்? அடுத்த தலை யார்? -
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத் மீது நடவடிக்கை கோரி வழக்கு.. ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்? இதுதான் காரணம் - எடப்பாடி சொன்ன சீக்ரெட்! -
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி பதவியிலிருந்து ஹசீனா சையத் நீக்கம் -
சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா -
முதலில் தமிழன், அப்புறம் தான் இந்து! மேலூர் பாஜகவை அதிரவிட்ட வார்த்தை.. பின்னணியில் விகே பாண்டியன்? -
விஜய் உடன் மல்லுக்கட்டும் இனிகோ இருதயராஜ்.. திருச்சி கிழக்கு திமுக வேட்பாளரின் பலம், பலவீனம் என்ன? -
2021 Vs 2026... காலம் மாறிபோச்சு... எய்ம்ஸ் பற்றி பேசாத திமுக..! ‘நீட்’ பற்றி பேசும் அதிமுக! -
சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா! -
ராமதாஸ் தரப்புக்கு பெரிய அடி.. மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்! -
துரந்தர் 2.. தமிழ்நாட்டில் தடை செய்ய கோரி வழக்கு தள்ளுபடி ஏன்.. ஐகோர்ட் தீர்ப்பு என்ன












Click it and Unblock the Notifications