பாக்., பிடியில் சிக்கிய அபிநந்தனுக்கு என்ன நடந்திருக்கும்… விமானி நச்சிகேதா பதில்
Recommended Video

டெல்லி: இன்று நாடு திரும்ப உள்ள விங் கமாண்டர் அபிநந்தனை விசாரித்தால் மட்டுமே உண்மை என்னவென்று தெரியவரும் என விமானி நச்சிகேதா பதிலளித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தைத் தணிக்கும் விதமாக பாகிஸ்தான் வசம் பிடிபட்ட இந்திய விமானி அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான் நேற்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் விமானி அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.

உண்மை தெரியவரும்
இதனிடையே, கார்கில் போரின் போது பாகிஸ்தான் வசம் சிக்கிய இந்திய விமானி நச்சிகேதா கூறியிருப்பதாவது: விமானி அபிநந்தன் நாடு திரும்பியதும் அவரிடம் விசாரித்தால் மட்டுமே உண்மை என்னவென்று தெரியவரும் என தெரிவித்துள்ளார்.

விமானிக்கு ஊக்கம்
எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் அளவுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் எந்த உண்மையையும் பாகிஸ்தான் வசம் தெரிவித்து இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் இந்தியப் படையில் அளிக்கப்பட்டுள்ள பயிற்சி அவருக்கு ஊக்கத்தை அளித்து இருக்கும் எனவும் தெரிவித்தார்

நம்புகிறேன்
ஜெனிவா ஒப்பந்தபடி சிறைபிடிக்கப்பட்ட வீரர்கள் மரியாதையாக நடத்தப்பட்டு, பாதுகாப்பாக திருப்பி அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி இது நடந்து இருக்கும் என தான் நம்புவதாக கூறினார்.

வீரம், விவேகம்
அபிநந்தன் வீரமும், விவேகமும் உள்ள வீரர். ஒரு விமானப்படை வீரருக்கான பண்பும் பண்பாடும் அவரிடம் உள்ளது. நாம் அவரை நினைத்து பெருமைப் பட வேண்டும் அவர் இந்திய மண்ணில் காலடி வைத்து மீண்டும் திரும்ப, நாடே காத்திருக்கிறது என்று தெரிவித்தார். 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் வசம் சிக்கிய விமான நசிகேதா இந்திய அரசின் நடவடிக்கையால் எட்டு நாட்களுக்கு பிறகு நாடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கையில் பேப்பர்
முன்னதாக, பாராசூட் மூலம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்த விமானி அபிநந்தன் தனது கையிலிருந்த பேப்பர்களை கிழித்து வாயில் போட்டு மென்று துப்பினார் என கூறப்படுகிறது.

முழு மருத்துவ பரிசோதனை
அதேநேரம், பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் கேட்ட முக்கிய கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல், அபிநந்தன் வீரமாகவும் விவேகமாகவும் அந்த இடத்தில் செயல்பட்டது, இந்தியர்கள் அனைவரையும் பெருமை பட வைப்பதாக அமைந்தது. இருப்பினும், இந்தியா வசம் விமானி அபிநந்தன் ஒப்படைக்கப்பட்ட பின்பு ராணுவத்தின் முழு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு என்ன நடந்தது என்பது உறுதியாகத் தெரியும் என கூறப்படுகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications