"குற்ற உணர்வு.. நைட் தூங்க முடியல.." ஏர் இந்தியா விபத்து! ஓராண்டிற்கு பிறகும் உயிர் பிழைத்தவர் கதறல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்தியாவில் மிக மோசமான ஒரு விமான விபத்து அரங்கேறியது. குஜராத்தில் இருந்து லண்டன் சென்ற விமானம் ஓரிரு நொடிகளில் விபத்தில் சிக்கிய நிலையில், அதில் 260 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்தவர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில், அவர் இன்னுமே அந்த கோர நினைவுகளில் இருந்து மாண்டு வர முடியாமல் போராடி வருகிறாராம்.

சரியாக ஓராண்டுக்கு முன்பு, இதே நாளில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான செய்தி உலகையே உலுக்கியது. அந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்த நிலையில், விஸ்வாஷ்குமார் ரமேஷ் என்ற 39 வயது நபர் மட்டும் அதிசயமாக உயிர் பிழைத்தார்.

Air India Flight Air India Flight Crash

அந்த கருப்பு தினம்

இன்று அந்த விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அந்தத் துயரத்தின் வடுக்கள் இன்னும் மறையவில்லை. இது தொடர்பாக ரமேஷ் கூறியுள்ள சில கருத்துகள் நெஞ்சை உலுக்குவதாகவே இருக்கிறது.

2025ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி, அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்டது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில் 12 ஊழியர்கள் உட்பட மொத்தம் 242 பேர் இருந்தனர். விமானம் தரையிலிருந்து கிளம்பிய 32 வினாடிகளிலேயே எதிர்பாராத விதமாக ஒரு மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதி மற்றும் கேன்டீன் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்தனர். மேலும், விமானம் கேண்டீனில் மோதியதில் தரையில் இருந்த 19 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்புகள் 260ஆக உயர்ந்தது.

உயிர் பிழைத்த ஒரே நபர்

முதலில் விபத்தில் விமானத்தில் இருந்த அனைவருமே உயிரிழந்துவிட்டதாகவே அனைவரும் நினைத்தனர். ஆனால், விபத்து நடந்த இடத்திலிருந்து, ரத்தக் கறைகள் படிந்த டி-சர்ட் அணிந்து, கையில் ஒரு மொபைல் போனுடன் விஸ்வாஷ்குமார் ரமேஷ் நடந்து வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியது. 260 பேர் பலியான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் அவர்தான்.

தூங்க கூட முடியல

தற்போது இங்கிலாந்தின் லெய்செஸ்டர் நகரில் வசித்து வரும் ரமேஷ், விபத்திற்குப் பிறகுத் தனது வாழ்க்கை மிகவும் சவாலாக மாறிவிட்டதாகக் குறிப்பிடுகிறார். இது தொடர்பாக அவர், "நான் உயிர் பிழைத்துவிட்டதை மக்கள் பார்க்கிறார்கள். ஆனால், நான் சந்திக்கும் சவால்களை அவர்கள் அறிவதில்லை. விபத்தின் கோர நினைவுகளால் என்னால் தூங்க முடியவில்லை. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளேன்" என்றார்.

மேலும், சர்வைவர் கில்ட் (Survivor Guilt) எனப்படும், மற்றவர்கள் இறந்து தான் மட்டும் பிழைத்துவிட்டோமே என்ற குற்ற உணர்வு மற்றும் அதிர்ச்சியிலும் அவர் இருக்கிறார். இந்த விபத்தில் ரமேஷ் தனது சகோதரர் அஜயையும் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் சந்திக்கும் போராட்டங்கள் குறித்துப் பேசும் அவர், "நான் உயிருடன் இருப்பதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஆனால் உயிர் பிழைப்பது என்பது கதையின் ஒரு பகுதி மட்டுமே. அதன் பிறகு நான் எதிர்கொள்ளும் உடல், மன மற்றும் நிதி ரீதியான போராட்டங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை" என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

வெளியே வரக்கூடப் பயப்படுகிறார்

லெய்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் படேல் தான் கடந்த ஓராண்டாக ரமேஷின் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வருகிறார். அவர் கூறுகையில், "ரமேஷ் தற்போது மற்றவர்களின் துணையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூட முடியாத நிலையில் இருக்கிறார். அவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தின் பாதிப்புகளில் இருந்து அவர் எப்போது மீண்டு வருவார் எனத் தெரியவில்லை. அல்லது வாழ்நாள் முழுவதும் கூட அந்த பாதிப்பு அவருடன் இருக்கலாம்" என்று கவலையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து இந்தியப் புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து இங்கிலாந்தின் விமான விபத்து விசாரணைப் பிரிவு ஆய்வு செய்து வருகிறது. கடந்த மார்ச் மாதம், ரமேஷ் அகமதாபாத் சென்று இந்த விசாரணை அதிகாரிகளைச் சந்தித்து விபத்து குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். விபத்து தொடர்பான இறுதி அறிக்கை வெளியானால் தான் இதற்கான காரணம் முழுமையாகத் தெரிய வரும்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+