பாஜக அமைச்சரவையில் இடம் பிடிக்க அதிமுகவுக்கு ஆசையோ ஆசை.. ஆனாலும் ஒரு பெரிய சிக்கல் இருக்குதே!
Recommended Video
டெல்லி: மத்தியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தால், மத்திய அமைச்சரவையில், அதன் கூட்டணி கட்சியான அதிமுக இடம் பெறும் வாய்ப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இந்த ரிசல்ட்டுகளை அறிய, பிறரைவிடவும், அதிமுக தலைவர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். இதற்கு காரணம், மீண்டும் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை பங்கிட அரிய வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆசைதான்.
கடந்த லோக்சபா தேர்தலில் 37 தொகுதிகளை வென்று, நாட்டின் 3வது பெரிய கட்சியாக உருவெடுத்தது அதிமுக. ஆனால், என்ன லாபம்? ஒரு மத்திய அமைச்சர் பதவி கூட கிடைக்கவில்லையே.

அமைச்சரவையில் இடம் இல்லை
பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துவிட்டதால், மத்திய அமைச்சரவையில் இடம் பெறும் அதிருஷ்டம் அதிமுகவுக்கு கிடைக்காமல் போனது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் போன்ற அதிமுக தலைவர்கள், பாஜக தலைமையோடு நெருக்கமாக இருந்தாலும், அமைச்சரவையில் இடம் அளிக்கவில்லை மோடி.

தேசிய ஜனநாயக கூட்டணி
இந்த நிலையில் இப்போது அதிகாரப்பூர்வமாகவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துவிட்டது அதிமுக. எனவே இம்முறை மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தால், அமைச்சரவையில் பங்கு பெறும் ஆசையில் உள்ளனர் அதிமுக தலைவர்கள். டெல்லியில் நேற்று பாஜக தலைவர் அமித்ஷா கொடுத்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற ஓ.பன்னீர் செல்வத்திடம் நிருபர்கள் இந்த கேள்வியை எழுப்பினர்.

நாளையே ஆலோசனை
அமைச்சரவையில் இணைவீர்களா என்ற நிருபர்கள் கேள்விக்கு ஓபிஎஸ் அளித்த பதிலைப் பாருங்கள்: இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தீர்ப்பை அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 23ம் தேதி நடைபெற உள்ள ஓட்டு எண்ணிக்கை முழுமையாக நிறைவு பெற்ற பிறகு, அதுகுறித்து, தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து பேசி மத்திய அமைச்சரவையில் இணைவது பற்றி முடிவு செய்வோம். 38 லோக்சபா தொகுதி மற்றும் 22 சட்டசபை இடைத் தேர்தலிலும், அதிமுக கூட்டணி மாபெரும் மற்றும் மகத்தான வெற்றியை பெறும். இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

சிக்கல்
மத்திய அமைச்சரவையில் இணைய அதிமுக தலைவர்களுக்கு விருப்பம் இருக்கிறது என்பது அவர்களது பேச்சுக்கள் மூலம் நன்கு புலப்படுகிறது. அதிலும் தனது மகன் ரவீந்திரநாத்துக்கு அமைச்சரவையில் இடம் பிடித்துவிட வேண்டும் என்ற பேரவா துணை முதல்வருக்கு இருக்கிறதாம். ஆனால், அதற்கு அதிமுகவுக்கு போதிய எம்பிக்கள் வெற்றி பெற வேண்டுமே. கருத்து கணிப்பு முடிவுகள் சில, அதிமுகவுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும் என்கின்றன. தேசிய அளவில் பாஜக கூட்டணி வெல்லும் என கூறும் கருத்துக் கணிப்பு முடிவுகளை வைத்து அமைச்சரவையில் இடம் பிடிக்க மனக்கோட்டை கட்டும் அதிமுக தலைவர்கள், அதே கருத்துக் கணிப்பு தமிழகத்தில் அதிமுக வெற்றி பெறாது என கூறியதை மறந்து விட்டார்களா என கேள்வி எழுப்புகிறார்கள் சமூக வலைத்தளங்களில்.
-
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!












Click it and Unblock the Notifications