மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்? திமுக எம்பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் கட்டப்படும் என கடந்த 2018ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. ஏறத்தாழ 7 ஆன பின்னரும் கூட இன்னும் மருத்துவமனை கட்டி முடிக்கப்படவில்லை. இந்நிலையில், எப்போது மருத்துவமனை முழுமையாக கட்டி முடிக்கப்படும்? என்று திமுக எம்பி அருண் நேரு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ், "மதுரை எய்ம்ஸ் திட்டம் பிரதம மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

AIIMS Madurai DMK BJP

இந்த திட்டத்திற்கான மொத்த செலவு ரூ. 2021.51 கோடி என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையுடன் கடன் ஒப்பந்தத்தின் கீழ் திட்ட நிதி பெறப்பட்டு வருகிறது. திட்டத்திற்கு இதுவரை ரூ.421.02 கோடி விடுவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி, திட்டத்தின் பணிகளை 42 சதவீதம் அளவுக்கு நிறைவு செய்யப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் திட்டத்தை முடிப்பதற்காக இலக்கு நிர்வகிக்கப்பட்டிருக்கிறது" என தெரிவித்திருக்கிறார்.

மொத்தம் 950 படுக்கைகளுடன் 10 தளங்களுடனும் இந்த மருத்துவமனை கட்டப்பட உள்ளது. முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன், ஆர்டிஐ மூலம் மருத்துவமனை எப்போது கட்டி முடிக்கப்படும்? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும் என தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+