ஏர்இந்தியா.. பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விரைவில் விற்பனை.. நிர்மலா சீதாராமன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : வரும் மார்ச் மாதத்திற்குள் ஏர்இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது பற்றி கூறுகையில், " ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் அநத் நிறுவனங்களை இந்த ஆண்டுக்குள் விற்பனை செய்து சுமார் ஒரு லட்சம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளோம்.

Air India, Bharat Petroleum Corporation will be sold : Nirmala Sitharaman

ஏர் இந்தியாவை வாங்க சர்வதே முதலீட்டாளர்களிடையே ஆர்வம் அதிகமாக உள்ளது. முன்னதாக முதலீட்டாளர்களிடம் இருந்து தெளிவான பதில் வராமல் போனதால் ஒரு வருடத்திற்கு முன்பே நஷ்டத்தில் இருக்கும் ஏர் இந்தியாவை விற்க முடியாமல் போனது.

பொருளாதார மந்த நிலையை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல துறைகள் தற்போது துயரமான சூழலில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

தொழில்துறையினர் பலர் புதிய முதலீடுகளுக்கு திட்டமிட்டுள்ளனர். சில துறைகளில் ஜிஎஸ்டி., வரி வசூல் போன்றவற்றால் விற்பனை அதிகரித்துள்ளது " என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+