கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்கும் சிபிஐ.. ப.சிதம்பரத்திற்கு புதிய சோதனை.. அடுத்த அதிரடி மூவ்
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு புதிய சோதனையாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அடுத்த அதிரடி திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு புதிய சோதனையாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அடுத்த அதிரடி திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தற்போது ப. சிதம்பரம் திகார் சிறையில் இருக்கிறார். எது நடக்க கூடாது என்று நினைத்தாரோ அதுவே ப. சிதம்பரம் வழக்கில் தற்போது நடந்துவிட்டது.
இவருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் சிபிஐ அமைப்பும், அமலாக்கத்துறையும் அணை போட்டுகொண்டு உள்ளது. அதேசமயம் சிபிஐ, அமலாக்கத்துறை இரண்டும் அவருக்கு வேறு விதங்களில் செக் வைக்கவும் தயாரா இருக்கிறது.

எப்படி கைது
மூன்று வாரங்களுக்கு முன் ஐஎன்எக்ஸ் வழக்கில் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் இவர் 15 நாட்கள் விசாரிக்கப்பட்டார். அதன்பின் சிபிஐ, விசாரணை எல்லாம் முடிந்தது, எங்களுக்கு காவல் வேண்டாம் என்று கூறியது. இதனால் தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அமலாக்கத்துறை கைது
அதேபோல் ஐஎன்எக்ஸ் வழக்கில் அமலாக்கத்துறையும் ப. சிதம்பரத்தை கைது செய்ய முயன்று வருகிறது. இதற்கு எதிராக ப. சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இதனால் ப. சிதம்பரம் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அடுத்த நொடியே அமலாக்கத்துறை மூலம் கைது செய்யப்படுவார்.

அடுத்த வழக்கு
கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்கிறியே சிவாஜி என்று சிவாஜி படத்தில் விவேக் கூறும் வசனம் போல இன்னொரு திட்டத்தையும் சிபிஐ கையில் எடுத்துள்ளது. ப. சிதம்பரம் சிக்கி இருக்கும் இன்னொரு வழக்கான ஏர்செல் மேக்சிஸ் வழக்குதான் அது.

முன் ஜாமீன் ரத்து
ஏர்செல் மேக்சிஸ் முறைகேட்டில் ப. சிதம்பரம் நேற்றுதான் முன் ஜாமீன் பெற்றார். அவரின் மகன் எம்பி கார்த்தி சிதம்பரமும் முன் ஜாமீன் பெற்றார். டெல்லி சிபிஐ நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பிற்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை இரண்டும் இன்று டெல்லி ஹைகோர்ட்டில் முறையிட உள்ளது.

செக்
இன்னும் சற்று நேரத்தில் இதற்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்ய உள்ளது. ப. சிதம்பரத்தின் முன் ஜாமீனை ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க உள்ளது. இதனால் ப. சிதம்பரம் ஐஎன்எக்ஸ் வழக்கில் தப்பினாலும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிக்குவார் என்று கூறுகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications