5 மாநிலங்களில் யாருக்கு வெற்றி? நாளை வாக்கு எண்ணிக்கை.. பரபரப்பில் கட்சிகள்
டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 11ம் தேதியான நாளை எண்ணப்படுகின்றன. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்களில் விறுவிறுப்பாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கும், நவம்பர் மற்றும் டிசம்பரில் தேர்தல்கள் நடைபெற்றன.
சட்டீஸ்கரில் இரு கட்டங்களாக நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20ம் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்
மத்திய பிரதேசம், மிசோராமில் நவம்பர் 28ம் தேதியிலும், தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் டிசம்பர் 7ம் தேதியிலும், சட்டசபை தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

மாலைக்குள் முழு ரிசல்ட்
இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள், தேர்தல் கமிஷன் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்பட உள்ளது. காலை 11 மணிக்குள் 5 மாநிலங்களிலும் வெற்றி பெறப்போவது யார் என்பது தொடர்பாக, டிரெண்ட் வெளியாகிவிடும். மாலைக்குள் வாக்குகள் முழுமையாக, எண்ணப்பட்டு, முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

பாஜக மீது எதிர்பார்ப்பு
மத்திய பிரதேசத்தில், 306 வாக்கு எண்ணிக்கை மையங்களும், தெலுங்கானாவில், 43 வாக்கு எண்ணிக்கை மையங்களும், சட்டீஸ்கரில் 27 வாக்கு எண்ணிக்கை மையங்களும், மிசோராமில் 40 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி, நடைபெறுவதால் அங்கு அந்த கட்சிக்கு அக்கினி பரிட்சை காத்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் இது பார்க்கப்படுகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications