நாடு முழுவதும் டாக்டர்கள் தொடர்ந்து வழக்குகள்.. உச்ச நீதீமன்றத்திற்கு மாற்ற கோரி பாபா ராம்தேவ் மனு
டெல்லி: அலோபதி மருத்துவம் குறித்து பேசிய சர்ச்சைக் கருத்துக்காக நாடு முழுவதும் டாக்டர்கள் தன் மீது தொடர்ந்துள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மாதம் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது ஒரு சர்ச்சை வெடித்தது, கொரோனா வைரஸுக்கு எதிரான அலோபதி மருந்துகளின் செயல்திறன் எப்படி இருக்கிறது என்று யோகா குரு பாபா ராம்தேவ் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக பாபா ராம்தேவ் பேசிய வீடியோ ஒன்று வைரலானது "அலோபதி மருந்துகள் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இறந்துவிட்டனர், சிகிச்சை அல்லது ஆக்ஸிஜன் கிடைக்காததால் இறந்தவர்களை விட இது மிகவும் அதிகம்" என்று கூறியிருந்தார். இதனால், நாடு முழுவதும் கோபமடைந்த மருத்துவர்கள் பாபா ராம்தேவ்க்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்கள்.
இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகாண்ட் பிரிவு, அலோபதி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக பாபா ராம்தேவுக்கு எதிராக ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இன்னும் ஒரு படி மேலே போய், அலோபதி மருத்துவத்துக்கு எதிராக அவதூறுகளைத் தெரிவித்துவரும் பாபா ராம்தேவ் மீது தேசதுரோக குற்றச்சாட்டின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கடிதம் எழுதியிருந்தது.
இந்நிலையில் தனக்கு எதிராக இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தொடரப்பட்டுள்ள வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றும்படி உச்சநீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் அலோபதி மருத்துவம் குறித்து கூறியதற்காக தன் மீது காவல்நிலையங்களில் எப்ஐஆர் பதிவு செய்ய தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications