விவசாயிகளின் தொடர் போராட்டம்.. பணிந்தது மத்திய அரசு.. திடீரென முடிவை மாற்றியமைத்து உத்தரவு!
டெல்லி: மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது.

பாரத் பந்த்
ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.விவசாயிகளை அடிக்கடி பேச்சுவார்தைக்கு அழைக்கும் மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதில் பிடிவாதமாக உள்ளது. வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 27-ம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த் நடத்தினார்கள்.

கரிஃப் பயிர்கள் கொள்முதல் தாமதம்
இதற்கிடையே கரிஃப் பயிர்கள் கொள்முதல் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி தொடங்குவது வழக்கம். இந்த நிலையில் பஞ்சாப் மற்றும் அரியானாவில் அக்டோபர் 11-ம் தேதிக்கு காரிஃப் பயிர்கள் கொள்முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். பஞ்சாப் மற்றும் அரியானாவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் குடியிருப்புகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

விவசாயிகள் போராட்டம்
போலீசார் முற்றுகையிட்ட விவசாயிகளை தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைத்தனர். இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்தது. அக்டோபர் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட காரிஃப் பயிர்கள் கொள்முதல் நாளை அதாவது அக்டோபர் 3-ம் தேதி தொடங்கும் என்று அறிவித்துள்ளது. பருவமழை தாமதத்தால் மத்திய அரசு நெல் மற்றும் தினை கொள்முதல் செய்வதை இந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி என்பதை அக்டோபர் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மத்திய அரசு பணிந்தது
'கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்ததால் அக்டோபர் 3-ம் தேதி முதல் கொள்முதல் தொடங்கும், "என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறினார். மத்திய அரசு தனது முடிவை மாற்றியதால், விவசாயிகள் நடத்தவிருந்த மீதமுள்ள போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications