இந்தி திணிப்பு... தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் முதல் முறையாக பின்வாங்கிய அமித்ஷா!
டெல்லி: இந்தி திணிப்பு விவகாரத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் கடுமையான எதிர்ப்பால் தாம் தெரிவித்த கருத்தில் இருந்து முதல் முறையாக பின்வாங்கி இருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றதில் இருந்து இந்தி திணிப்பு விவகாரம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. கீழ் சில நாட்களுக்கு முன்னர் ஒரே தேசம் ஒரே மொழி; இந்தியே இந்தியாவின் பொதுமொழி என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
இது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமித்ஷாவின் இந்த திணிப்பு பேச்சுக்கு எதிராக பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தமிழகத்தில் போராட்டங்கள்
தமிழகத்தில் போராட்டங்கள் மையம் கொண்டிருக்கின்றன. குடியாத்தத்தில் திமுக இளைஞர்கள் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்தனர். ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் இன்று நடத்தப்பட்டன.

திமுக போராட்டம்
திமுக சார்பாக நாளை மறுநாள் இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென தமது கருத்தில் இருந்து பின்வாங்கி இருக்கிறார்.

இந்தி திணிப்பு அமித்ஷா விளக்கம்
இது தொடர்பாக அமித்ஷா தெரிவித்துள்ள விளக்கத்தில், தாம் இந்தி பேசாத மாநிலத்தில் இருந்து வந்தவன்; இந்தியை திணிக்க வேண்டும் என நான் ஒருபோதும் கூறவே இல்லை.

2-வது மொழியாக இந்தி
தாய்மொழிக்குப் பின்னர் 2-வது மொழியாக இந்தியை கற்க வேண்டும் என்பது எனது கோரிக்கை. இந்தியாவின் பொதுமொழியாக இந்தி இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று மட்டுமே குறிப்பிட்டேன் என விளக்கம் அளித்திருக்கிறார்.

பின்வாங்கிய அமித்ஷா
மத்திய அரசின் பல்வேறு திணிப்புகளுக்கு தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போதுதான் முதல் முறையாக தமது கருத்தில் இருந்து அமித்ஷா பின்வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications