நேரு பிரதமரானதுதான் நாட்டின் முதல் வாக்கு திருட்டு! இந்திரா காந்தி ஜெயித்ததும் இப்படித்தான்-அமித்ஷா
டெல்லி: வாக்கு திருட்டு குறித்து தனது குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன என, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு, "நேரு பிரதமரானதுதான் இந்தியாவின் முதல் வாக்கு திருட்டு. ரேபரேலியில் இந்திரா காந்தி வென்றதும் வாக்கு திருட்டு மூலம்தான். இந்திய குடியுரிமை பெரும் முன்னரே வாக்களித்தவர் சோனியா காந்தி" என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குத் திருட்டு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை கடந்த நவம்பர் 5ம் தேதி அன்று நிகழ்த்தியிருந்தார். அதில், ஹரியானாவில் ஒரே வீட்டிலிருந்து 501 வாக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார். தனது இந்த கேள்விக்கான பதில் என்ன என்பது குறித்து ராகுல் காந்தி மக்களவையில் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

வாக்கு திருட்டு - விளக்கம்
இதற்குப் பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, "தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. வீடு எண் 265 என்பது ஒரு சிறிய குடியிருப்பு அல்ல, அது ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பரம்பரை நிலத்தில் பல குடும்பங்கள் இணைந்து வாழும் குடியிருப்பு. எனினும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனி வீட்டு எண்கள் ஒதுக்கப்படவில்லை, எனவே அவர்களின் வீட்டு எண் 265 என்று மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், அந்த குடும்பங்களில் ஒன்றில் மூன்று தலைமுறையினர் ஒன்றாக வாழ்கின்றனர்.
வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்பு
இந்த வீட்டு எண் முறை, ஹரியானாவில் காங்கிரஸ் அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே நடைமுறையில் உள்ளது. இது போலி வீடும் அல்ல, போலி வாக்குகளும் அல்ல. ஊடுருவல்காரர்கள் ஒரு நாட்டின் பிரதமரையும், ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையும் முடிவு செய்தால், எந்தவொரு நாட்டின் ஜனநாயகமும் பாதுகாப்பாக இருக்குமா? ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருக்கக் கூடாது. இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கக் கூடாது. இதுதான் வாக்காளர் பட்டியலைச் சுத்திகரிப்பதாகும்" என்று விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவின் முதல் வாக்கு திருட்டு
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவின் முதல் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில்தான் முதல் வாக்குத் திருட்டு நடந்தது. அப்போது பிரதமர், மாகாண காங்கிரஸ் தலைவர்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. அந்த வாக்குகளில் சர்தார் வல்லபாய் படேலுக்கு 28 வாக்குகள் கிடைத்தன. ஜவஹர்லால் நேருவுக்கு வெறும் இரண்டு வாக்குகள் மட்டுமே. இருந்தபோதிலும், நேருவே பிரதமராக்கப்பட்டார்.
இரண்டாவது வாக்கு திருட்டு
இரண்டாவது வாக்குத் திருட்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நிகழ்ந்தது. தேர்தலை நீதிமன்றம் ரத்து செய்த பின்னரும், இந்திரா தனக்கு சட்ட பாதுகாப்பு அளித்ததால் இது நடந்தது. சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெறுமுன் வாக்காளரான விவகாரம் தற்போது சிவில் நீதிமன்றங்களில் உள்ளது. இது மூன்றாவது வாக்குத் திருட்டு.
காங்கிரஸ் கட்சியின் தொடர் தேர்தல் தோல்விகளுக்கு அதன் தலைமையே காரணம். காங்கிரஸ்காரர்கள் வாக்குகளைத் திருடியும், ஊடுருவல்காரர் பாதுகாப்பு பேரணியும் நடத்தியது. இருப்பினும் பீகாரில், எங்கள் அரசு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது.
காங்கிரஸ் தோல்விக்கு காரணம்
நாட்டில் தேர்தலில் தோற்கும்போது தேர்தல் ஆணையம், தேர்தல் செயல்முறை மற்றும் வாக்காளர் பட்டியல்களை அவதூறு செய்கிறார்கள். அவர்களது தோல்விக்கு உண்மையான காரணம் தலைமையே அன்றி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களோ அல்லது வாக்காளர் பட்டியலோ அல்ல. ஒரு நாள், காங்கிரஸ் தொண்டர்களே தங்கள் தலைவர்களிடம் இத்தனை தேர்தல்களில் எப்படி தோற்றீர்கள் என்று கேள்வி கேட்பார்கள்" என்று கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். அமித்ஷாவின் பேச்சை கண்டித்து வெளிநடப்பும் செய்தனர்.
-
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications