பாக் மீது இந்தியா நடத்திய இன்னொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்.. கிரிக்கெட் வெற்றி குறித்து அமித்ஷா புகழாரம்
டெல்லி: இந்தியா, பாகிஸ்தானுக்கிடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது குறித்து பாஜக அமித்ஷா தனது டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே 30 தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த போட்டியில் இந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள 10 நகரங்களில் நடைபெறுகிறது.
இதன் இறுதி போட்டி லண்டன் லார்ட்சில் ஜூலை 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் மான்செஸ்டரில் நேற்றைய தினம் இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கேரள ஜோதிடர்
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையே சுமூக உறவு இல்லை. இதனால் இந்த போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தும் என ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். அதற்கேற்ப கேரள ஜோதிடர் ஒருவரும் அவ்வாறே கணித்தார்.

இரு முறை போட்டி ஒத்தி வைப்பு
இதையடுத்து முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. அதில் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்களை குவித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி ஆடிய போது மழை குறுக்கிட்டதால் இரு முறை போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தியா
மழையால் பாகிஸ்தானுக்கு 40 ஓவர்களில் 302 ரன்களை குவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் 6 விக்கெட் இழப்புக்கு 40 ஓவர்களில் 212 ரன்களை பாகிஸ்தான் எடுத்தது. இதனால் 89 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தானுடனான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை இந்தியா தோற்றதில்லை என்ற நம்பிக்கையை இந்தியா காப்பாற்றி விட்டது.

கிரிக்கெட் போட்டி
இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்த நிலையில் இந்தியாவின் வெற்றி குறித்து பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது பெருமை அளிக்கிறது.
|
அமித்ஷா பாராட்டு
சிறப்பான ஆட்டத்துக்கு எனது பாராட்டுகள். இந்த வெற்றியானது பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய இன்னொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகும். ராணுவத்தினர் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் ஏற்பட்ட முடிவே தற்போது இந்திய அணியினரால் நடந்த ஸ்டிரைக்கிலும் ஏற்பட்டுள்ளது என அமித்ஷா பாராட்டியுள்ளார். அது போல் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அசோக் கெலாட் மெஹபூபா முஃப்தி ஆகியோரும் பாராட்டியுள்ளனர்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications