3 டெல்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதா.. மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித்ஷா..!
3 டெல்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதா இன்று தாக்கலாகிறது
டெல்லி: 3 டெல்லி மாநகராட்சிகளை இணைக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
சர்வதேச அளவில் ஜப்பானின் டோக்கியோ மாநகராட்சிக்கு பிறகு 2வது பெரிய மாநகராட்சியாக இருந்த டெல்லி மாநகராட்சி விளங்கியது.
இந்நிலையில், டெல்லி மாநகராட்சி கடந்த 2011-ம் ஆண்டு, வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சி என்று 3-ஆக பிரிக்கப்பட்டது.

3 மாநகராட்சிகள்
அப்போதிலிருந்து, 3 மாநகராட்சிகளும் பாஜகவின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன. ஆனால், இந்த மூன்று மாநகராட்சிகளிலும் அடிப்படை பணிகளில் தொய்வு, ஊழியர்களுக்கு சரியான தேதியில் சம்பளம் கொடுக்க இயலாமை போன்ற நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டன. காரணம், 3 மாநகராட்சிகளிடையே வருவாயில் ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது... வார்டுகளும் சமமாக பிரிக்கப்படவில்லை... அதனால், நிதி தட்டுப்பாடு காரணமாக, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது..

சம்பளம்
இதனால் 3 மாநகராட்சிகளையும் மீண்டும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இறுதியில், இந்த சிக்கல்களை தீர்க்க 3 மாநகராட்சிகளையும் இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது... டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளையும் இணைக்கும் சட்டத்திருத்த மசோதா-2022 க்கு மத்திய அமைச்சரவை கடந்த 21 ம் தேதி ஒப்புதலும் அளித்தது.

ஆம் ஆத்மி
இதற்கு, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.. 3 மாநகராட்சிகளையும் இணைப்பதன் மூலம் தோல்வியில் இருந்து காப்பாற்றலாம் என்று ஊழல் பாஜக நினைத்தால், டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து பாஜகவின் தவறான எண்ணங்களை மாநகராட்சி தேர்தலில் விரைவில் அகற்றுவார்கள் என்றும் மாநகராட்சி தேர்தலில் தோல்வியை தவிர்ப்பது பாஜகவால் சாத்தியமற்றது என்றும் ஆம் ஆத்மி தெரிவித்திருந்தது.

அமித்ஷா
இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவையில் மாநகராட்சிகளை இணைக்கும் சட்டத்திருத்த மசோதா-2022 வை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்கிறார்.,..ஒன்றாக இணைப்பதன் மூலம், பாஜக - ஆம் ஆத்மி இடையிலான அரசியல் மோதல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி 3 மாநகராட்சிகளையும் ஒன்றாக இணைப்பதன் மூலம், பாஜக - ஆம் ஆத்மி இடையிலான அரசியல் மோதல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications