அமித் ஷா vs ப.சிதம்பரம்.. நாளை இப்படி ஒரு விவாதம் நடந்தா செமையா இருக்கும்.. எகிறும் எதிர்ப்பு!
இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீது நாளை நடக்கும் விவாதத்தின் போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி: இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீது நாளை நடக்கும் விவாதத்தின் போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு அவர் எப்படி பதில் அளிப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா என்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன. இதனால் லோக்சபாவில் எளிதாக சட்ட மசோதா நிறைவேறியது. இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.
அந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். இந்த நிலையில் நாளை ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

என்ன நேரம்
நாளை ராஜ்யசபாவில் இதன் மீதான விவாதம் நடத்த 60 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதன் மீதான அறிமுக உரையை அமித் ஷா ஆற்றுவார். இதற்கு எதிராக நாளை அவையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் என்ன பேசும் என்று எதிர்பார்ப்பு இதனால் அதிகரித்துள்ளது.

என்ன மசோதா
அதேபோல் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீது நாளை நடக்கும் விவாதத்தின் போது முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 106 நாட்கள் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் இருந்து விட்டு ப. சிதம்பரம் கடந்த வாரம்தான் வெளியே வந்தார்.

என்ன திட்டம்
அவர் வெளியே வந்த உடனே மத்திய அரசின் திட்டங்களை, பொருளாதார சீர்கேட்டை கடுமையாக விமர்சித்தார். முக்கியமாக அவர் காஷ்மீர் குறித்தும் பேசினார். அதில், காஷ்மீர் மக்கள் குறித்து நான் நினைத்துக் கொண்டு இருக்கிறேன். நான் அவர்களுக்காக வேண்டிக்கொண்டு இருக்கிறேன். திமிர்த்தனமாக எடுக்கப்பட்ட முடிவுதான் காஷ்மீர் பிரிவினை. 75 லட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளை பாஜக பறித்துள்ளது, என்றார்.

எதிர்பார்ப்பு
இந்த நிலையில் நாளை அவர் கண்டிப்பாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து பேசுவார். இதற்கு அமித் ஷா கண்டிப்பாக பதில் அளிப்பார். அதனால் நாளை ராஜ்யசபா அமித் ஷா vs ப. சிதம்பரம் என்று இருக்க போகிறது. இதனால் நாளை அவை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications