Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆனந்த் மஹிந்திரா கொடுக்கும் ஐடியா.. டெல்லி காற்று மாசுபாட்டுக்கு தீர்வு.. நல்லா இருக்கே! சாத்தியமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு என்பது அதிகரித்து வருகிறது. இதற்கு பயிர்க்கழிவுகளை எரிப்பதே முக்கிய காரணமாக கூறப்படும் நிலையில் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான சூப்பர் ஐடியாவை வழங்கி உள்ளார்.

தலைநகர் டெல்லி தற்போது பெரிய பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. அதாவது டெல்லியில் காற்று மாசுபாடு என்பது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 Anand Mahindras request to switch to regenerative agriculture to prevent Delhis air pollution

கடந்த சில நாட்களாக டெல்லியின் காற்று தரக்குறியீடு என்பது 400க்கும் அதிகமாகி உள்ளது. இது காற்று மாசுபாடு என்பது அபாயகரமான நிலையில் இருப்பதை உணர்த்துகிறது.

மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான உடல்நல பாதிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக சுவாச பிரச்சனையை உருவாக்கலாம். அதாவது சுவாசப் பாதை கோளாறு உள்பட ஆஸ்துமா தொடங்கி நுரையீரல் புற்றுநோய் வரை இந்த காற்று மாசுபாடு என்பது ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

இதனால் தான் டெல்லியில் தொடக்கப் பள்ளிகளுக்கு தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஐடி உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ‛வொர்க் ப்ரம் ஹோம்' வசதியை வழங்கி உள்ளன. இதற்கிடையே தான் டெல்லியின் காற்று மாசுபாட்டை தடுக்க மத்திய அரசும், டெல்லியை ஆட்சி செய்யும் ஆம்ஆத்மி அரசும் நடவடிக்கையை தொட்ஙகி உள்ளன.

அதன்படி வாகனங்களை பதிவு எண் அடிப்படையில் ஒற்றை, இரட்டை இலக்க எண்கள் கொண்டு பயணத்துக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதோடு டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவும், சுதான்சு துலியா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர்.

அப்போது டெல்லி காற்று மாசுபாட்டுக்கு பஞ்சாப்பில் பயிர் கழிப்பில் எரிப்பது தான் முக்கிய காரணம் என வாதிடப்பட்டது. இதற்கு பஞ்சாப் மாநில அட்டர்னி ஜெனரல் மறுப்பு தெரிவித்தார். ஆனால் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாத நிலையில் பஞ்சாப்பில் பயிர்க் கழிவு எரிப்பதை உங்கள் மாநிலத்தில் உடனடியாக நிறுத்த உத்தரவிட்டார். மேலும் அண்டை மாநிலங்களான உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானாவிலும் பயிர் கழிவுகளை எரிப்பதை தடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தான் டெல்லி காற்று மாசுபாட்டை குறைக்க பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ‛‛டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மீளாக்க வேளாண்மைக்கு (Regenerative Agriculture) வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இது மண்ணின் உற்பத்தி திறனை ஒரே நேரத்தில் அதிகரிக்கும் என்பதோடு, குச்சிகளை எரிப்பது என்பது லாபகரமான தொழிலாக மாறும். இதற்கு நாண்டி இந்தியாவின் விகாஸ் ஆபிரகாம் உதவ தயாராக இருக்கிறோம். செய்வோம்'' என தெரிவித்துள்ளார்.

 Anand Mahindras request to switch to regenerative agriculture to prevent Delhis air pollution

அதாவது மீளாக்க வேளாண்மை என்பது பயிர் கழிப்புகளை எரிப்பதை முற்றிலுமாக தடுக்கும். அதோடு பயிர் கழிவுகளை ஒன்றாக சேர்த்து உரமாக்கும் முறையை அடிப்படையாக கொண்டது. இதன்மூலம் பயிர்க்கழிவுகள் எரிப்பது, அதானால் ஏற்படும் காற்று மாசுபாட்டை தடுக்கலாம். மேலும் பயிர் கழிவுகளில் இருந்து உரம் தயாரித்து பயன்படுத்துவது என்பது உழவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் அது மண்வளத்தையும் பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+