Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் கடனை.. 'பிராடு' என வகைப்படுத்தியது SBI

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) நிறுவனத்தின் கடன் கணக்கை 'பிராடு' என ஸ்டேட் வங்கி வகைப்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து இந்நிறுவனத்திற்கு கடன் வழங்கிய மற்ற வங்கிகளும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் கடன் கணக்கை 'மோசடி' என்று அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது

ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய பணக்காரராக அறியப்பட்ட அனில் அம்பானி, கடந்த காலங்களில் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார். 2018-19-ல் ரிலையன்ஸ் கேப்பிடல் மற்றும் 2011-ல் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஆகியவை சரிவை கண்டன. இதனை தொடர்ந்து 2024-ல் ரிலையன்ஸ் பவரும் சரிவை கண்டது.

Anil Ambani SBI Reliance

கடந்த 2024ல் சோலார் திட்ட ஏலங்களில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பங்கேற்றிருந்தது. ஆனால், போலியான ஆவணங்களை பயன்படுத்தி இந்த ஏலத்தில் நிறுவனம் பங்கிருந்தது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து 'இந்திய சோலார் சக்தி கழகத்தின்' தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இதே ஆண்டு நவம்பர் மாதம் இந்நிறுவனத்திற்கு எதிராக முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதாவது, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு டெண்டர்களில் பங்கேற்க இந்நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

இது இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய அடியாக மாறியது. இருப்பினும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து, இந்த தடை உத்தரவுக்கு இடைக்கால தடையை பெற்றது. ஆனால் அடுத்த பிரச்சனை பின்னாடியே வந்தது.

ரிலையன்ஸ் கேப்பிடல்

அதாவது ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் பெற்ற கடன் மற்றும் எந்த நோக்கத்திற்காக கடன் பெறப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக கடன் செலவழிக்கப்படாததும் கண்டுபிடிக்கப்பட்டது.

உலகின் முன்னணி தணிக்கை மற்றும் ஆலோசனை நிறுவனமான PwC, கடந்த 2018-19ம் ஆண்டுகளில் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தில் தணிக்கையை மேற்கொண்டது. இந்த தணிக்கைகளில், ரூ.12,751 கோடி அளவுக்கு கடன் முறைகேடான வழிகளில் வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து மேலும் தணிக்கை மேற்கொள்ள முயன்றபோது, அதை நிறுவனம் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இந்த PwC தணிக்கை செய்யும் வேலையிலிருந்து விலகிக்கொண்டது.

இதனை தொடர்ந்து Grant Thornton நிறுவனம் தணிக்கை பணியை தொடங்கியது. இதில் இன்னொரு விஷயம் வெளியில் வந்தது. அதாவது ரூ.12,000 கோடி பணம் வேறு நோக்கங்களுக்காக திருப்பி விடப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.

வேறு நோக்கம் எனில், நிறுவனத்திற்காக புதிய பொருட்களை வாங்க வங்கியில் கடன் வாங்கப்பட்டிருக்கும். ஆனால் அந்த கடனை வைத்து, ஊழியர்களுக்கு சம்பளம் போடப்பட்டிருக்கும். இது நிதி முறைகேடாகும்.

எனவே இந்த விவகாரம் குறித்து செபி விசாரணையை மேற்கொண்டு சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்படி அனில் அம்பானி மற்றும் அவருடன் தொடர்புடைய பல நிறுவனங்கள்/நபர்கள் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. மட்டுமல்லாது அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இப்படி தொடர்ச்சியாக பல சர்ச்சைகளில் அனில் அம்பானியின் நிறுவனம் சிக்கி வந்த நிலையில், எஸ்பிஐ ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் கடனை பிராடு என வகைப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்கிகள் அதிக அளவில் கடனை கொடுத்திருக்கின்றன. மக்கள் பணத்தை எதற்காக இப்படி கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளி கொடுக்கிறீர்கள் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+