மெகா வீடியோ கான்பரன்ஸ் இப்ப தேவையா.. முதலில் அபிநந்தனை மீட்கப் பாருங்கள்.. கெஜ்ரிவால் கோபம்
வீடியோ கான்பரன்ஸ் ஒத்தி வையுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

டெல்லி: "இப்ப இந்த மெகா வீடியோ கான்பிரஸ் தேவைதானா? அபிநந்தனை முதலில் மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு இந்தியா பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களை தாக்கி கூண்டோடு அழித்தனர். அதன் தொடர்ச்சியான இந்திய விமானம் ஒன்றினை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
அப்போது அந்த விமானத்தில் இருந்த பைலட், அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கி கொண்டார். இதனால் அபிநந்தனை எப்படியாவது பத்திரமாக மீட்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது.

வீடியோ கான்பரன்ஸ்
இந்நிலையில், பாஜக தொண்டர்கள் மத்தியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி உரையாற்றி இருக்கிறார். இது உலகிலேயே மெகா வீடியோ கான்பரன்ஸ் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே தாக்குதல் சம்பவத்தை பாஜக அப்பட்டமான அரசியலாக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதில் இப்போது தொண்டர்கள் மத்தியில் மோடி பேசுவது அவசியம்தானா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

அரவிந்த் கெஜ்ரிவால்
முன்னதாக, இந்த வீடியோ கான்பரன்ஸ் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வருக்கு பிரதமர் மோடிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பாகிஸ்தான்
அதில், "வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும், பிரதமர் மோடி அந்த நிழ்ச்சியை தள்ளி வைக்கவேண்டும். இந்நேரத்தில் தேசத்தில் இருப்பவர்கள் நாம் எல்லோருமே பாகிஸ்தான் வசம் சிக்கி இருக்கும், நம் வீரரை பத்திரமாக மீட்டு வருவதில்தான் சக்தி முழுவதையும் செலவிட வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல் பிரச்சாரம்
அதேபோல, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் இது பற்றி சொல்லும்போது, "ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் தேசப்பாதுகாப்பு குறித்து கவலையில் உள்ளது. முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அவரின் உண்ணாவிரதப் போராட்டத்தையே ஒத்திவைத்துள்ளார். அதேபோல, காங்கிரஸ் கட்சியும் தங்களின் செயற்குழு கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டது. ஆனால், பிரதமர் மோடி மட்டும் வாக்கு சாவடியை பலப்படுத்துவதிலும், பாஜக தேர்தல் பிரச்சாரத்திலும் பரபரப்பாக இயங்கி வருகிறார்" என தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications