காங். வாக்குறுதி எதிரொலி.. அருணாச்சலில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ்.. பாஜக அதிரடி!
அருணாச்சலப்பிரதேசத்தில் முக்கிய மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டெல்லி: அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள சில முக்கிய மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.
ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் 1958ல் இயற்றப்பட்ட மிக சர்ச்சைக்குரிய சட்டமாகும். இந்த சட்டம் ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்க கூடிய சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரத்திற்கு முன் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த சட்டம் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது. அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, சுதந்திரத்திற்கு பின் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.

ஏன்
இந்த சட்டத்தின்படி, குறிப்பிட்ட சில மாநிலங்களில் ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆயுதப்படை நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம்.

எங்கு எல்லாம்
அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் இந்த சட்டம் முதலில் கொண்டு வரப்பட்டது. அதன்பின் ஜம்மு காஷ்மீரில் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. பின் எதிர்ப்பு காரணமாக சில மாநிலங்களில் சில இடங்களில் மட்டும் இந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மிக மோசம்
இந்த நிலையில்தான் இந்த சட்டத்தை மொத்தமாக நீக்க போவதாக நேற்று காங்கிரஸ் அறிவித்தது. காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் பாஜக தொடர்ந்து இந்த சட்டத்திற்கு ஆதரவாகவே இருந்து வந்தது. இந்த நிலையில்தான் திடீரென்று அருணாச்சலப்பிரதேசத்தில் முக்கிய மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.

3 மாவட்டங்கள்
மொத்தம் அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள 9 மாவட்டங்களில் 3 மாவட்டங்களில் இருந்து இந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் வாக்குறுதிக்கு வடகிழக்கு மாநிலங்களில் பெரிய வரவேற்பு இருந்த காரணத்தால் பாஜக இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
-
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து?












Click it and Unblock the Notifications