“ஆபரேஷன் சிந்தூர் 2.0.. தீவிரமாக தயாராகி வருகிறோம்”- உறுதி செய்த இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி
டெல்லி: "ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் நோக்கம் அடையப்படும் வரை நடவடிக்கை தொடரும். இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருகிறது" என இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 26 சுற்றுலாப் பயணிகள் பலியாகினர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.

இந்தியா, பாகிஸ்தான் மீது கடுமையான பதில் தாக்குதலை மேற்கொண்டது. தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து, மே 10 ஆம் தேதி இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
இந்நிலையில் "ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் நோக்கம் அடையப்படும் வரை நடவடிக்கை தொடரும். இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0' நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருகிறது" என இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி எல்லைப் பகுதியில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோர்கர் மாவட்டத்தில் ராணுவ வீரர்களிடம் பேசிய உபேந்திர திவேதி, "தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இந்திய இராணுவம் முன்னணியில் இருக்க வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நாம் முதல் தூணாக மாறி பொதுமக்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும்.
ஒவ்வொரு ராணுவ வீரரும் ஒரு குறிப்பிட்ட தரத்தை அடைய வேண்டும். ஜிம்மிற்குச் செல்ல விரும்பினாலும், விளையாட்டுகளை விளையாட விரும்பினாலும், அல்லது சாகச நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பினாலும், அனைவருக்கும் வாய்ப்புகளைத் திறந்து வைத்திருக்கிறோம். பாதுகாப்பு அமைச்சர் நலத்திட்டங்களுக்கான மானியத் தொகையை இரட்டிப்பாக்கியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தார் ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் நோக்கம் அடையப்படும் வரை நடவடிக்கை தொடரும். இந்திய இராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தீவிரமாக தயாராகி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோவில் பேசும்போது, "பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் எல்லைக்குள் உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் போது நடந்தது வெறும் டிரெய்லர். வெற்றி என்பது நமக்கு ஒரு சிறிய சம்பவம் மட்டுமல்ல, அது ஒரு பழக்கமாகிவிட்டது என்பதை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்தது.
இது இந்தியர்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது மற்றும் உலகிற்கு பிரம்மோஸின் செயல்திறனை நிரூபித்தது. இந்த நம்பிக்கையைப் பராமரிப்பது இப்போது நமது கூட்டுப் பொறுப்பு. பஹல்காமில் 26 பேரை கொன்ற தாக்குதலைத் தொடர்ந்து, மே மாதம் பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவல்களை இந்திய பாதுகாப்புப் படைகள் குறிவைத்தன.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள், பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை அழிக்க இந்தியாவால் பயன்படுத்தப்பட்டன. இந்தத் திட்டம் பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியாவின் வளர்ந்து வரும் நம்பிக்கையையும் திறனையும் குறிக்கிறது." எனத் தெரிவித்திருந்தார்.
-
இந்தியாவில் முதல்முறை! சிறந்த பணியிட மகிழ்ச்சி விருதுகள் அறிமுகம்! ஹர்ஷ் கோயங்கா தலைமையில் மெகா டீம் -
50 ஆண்டுகளில் நடக்காத ஒன்று.. தென் மாநிலங்களுக்கு தண்டனையா! 1971 vs 2026.. அனல் பறக்கும் அரசியல்! -
பாகிஸ்தான் சட்டையை பிடிக்கும் அமீரகம்! "அந்த ₹25,000 கோடியை உடனே திருப்பி தாங்க.." எகிறும் நெருக்கடி -
நீ கைய குடு பங்கு! அமெரிக்கா முட்டி மோத.. சத்தமில்லாமல் இந்தியா பார்த்த வேலை! தோள் கொடுத்த ரஷ்யா! -
பாகிஸ்தான் நிலைமையை பாருங்க.. இதுல காஷ்மீர் வேணுமாம்! இப்படி ஆயிடுச்சே! -
அமெரிக்காவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை.. ஈரானுக்கு பறந்த பாகிஸ்தான் டீம்! அடுத்து என்ன நடக்கும்? -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க! -
இந்தியாவுக்கு வந்து இருக்கோம்.. பயத்துடன் இருந்த பாகிஸ்தான் பெண்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? -
"எல்லை மீறி போறீங்க.." டெல்லி சாலைகளில் ஓடும் டிரம்ப் ஆட்டோக்கள்.. அப்படி என்ன காரணம் தெரியுமா? -
"பில் கட்டக் கூட காசு இல்லையா?" கம்பி நீட்டிய பாகிஸ்தான்.. இது எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி












Click it and Unblock the Notifications