ராணுவ துப்பாக்கியின் தோட்டா.. செங்கோட்டை அருகே எப்படி வந்தது? டெல்லி குண்டுவெடிப்பில் திருப்பம்
டெல்லி: கடந்த நவ.10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்த தடயவியல் துறையினருக்கு 3 துப்பாக்கி தோட்டாக்கள் கிடைத்திருக்கின்றன. இவை ராணுவத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கான தோட்டா. அது எப்படி கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தது? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.
3 தோட்டாக்களும் 9 மி.மீ அளவு கொண்டவை. கண்டெடுக்கப்பட்ட 3 தோட்டாக்களில் 1 காலியாக இருந்திருக்கிறது. உலகம் முழுவதும் இந்த தோட்டாக்கள் ரொம்பவே ஈஸியாக கிடைக்கிறது. இந்திய ராணுவத்திலும், காவல்துறையிலும் இந்த தோட்டாக்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

ராணுவத்தை பொறுத்தவரை
- Heckler & Koch MP5
- Carl Gustaf SMG
- Carbine 1A
- SMGs
ஆகிய துப்பாக்கிகளில் இந்த தோட்டாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதுவே காவல்துறையை பொறுத்தவரை
- Browning Hi-Power
- Trichy Pistol
- Glock Pistols
போன்ற கை துப்பாக்கிகளில் இந்த தோட்டாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சுடும்போது அதிர்வு குறைவாக இருக்கும் என்பதால், இந்த தோட்டாக்கள் எளிதாக இலக்கை கடுமையாக தாக்கும். அதேபோல விலையும் குறைவு என்பதாலும் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் டெல்லி சம்பவத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் அனைவரின் துப்பாக்கி தோட்டாக்களும் பரிசோதித்து பார்க்கப்பட்டன. அனைத்தும் சரியாக இருந்திருக்கிறது. அப்படியெனில் சம்பவ இடத்தில் கிடைத்த தோட்டாக்கள் யாருடையது? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
செங்கோட்டை மெட்ரோ நிலைய வாயில் எண் 1 அருகே கார் வெடிப்பு நடந்திருக்கிறது. இந்த வெடிப்பு தீவிரவாத சதி செயல் என்று மத்திய அரசு சந்தேகம் தெரிவித்திருக்கிறது. மட்டுமல்லாது காரை ஓட்டிக்கொண்டு வந்த டாக்டர் உமர் நபி, தீவிரவாதியாக இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்திருக்கிறது.
இந்த வெடிப்பு சம்பவத்தில் டாக்டர் உமர் நபியின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போனது. இருப்பினும் சிதைந்த உடலிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ, உமர் நபி தாயாரின் டிஎன்ஏ உடன் ஒத்து போகிறது.
அதேபோல சம்பவ இடத்தில் தடயவியல் துறையினர் நடத்திய ஆய்வில், வெடித்து சிதறிய காரில் உயர் ரக வெடி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது அமோனியம் நைட்ரேட்டாக இருக்கலாம் என்றும், மொத்தம் 30-40 கிலோ இருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications