Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணுவ துப்பாக்கியின் தோட்டா.. செங்கோட்டை அருகே எப்படி வந்தது? டெல்லி குண்டுவெடிப்பில் திருப்பம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த நவ.10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்த தடயவியல் துறையினருக்கு 3 துப்பாக்கி தோட்டாக்கள் கிடைத்திருக்கின்றன. இவை ராணுவத்தில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கான தோட்டா. அது எப்படி கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தது? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.

3 தோட்டாக்களும் 9 மி.மீ அளவு கொண்டவை. கண்டெடுக்கப்பட்ட 3 தோட்டாக்களில் 1 காலியாக இருந்திருக்கிறது. உலகம் முழுவதும் இந்த தோட்டாக்கள் ரொம்பவே ஈஸியாக கிடைக்கிறது. இந்திய ராணுவத்திலும், காவல்துறையிலும் இந்த தோட்டாக்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

Delhi Bomb Blast

ராணுவத்தை பொறுத்தவரை

  • Heckler & Koch MP5
  • Carl Gustaf SMG
  • Carbine 1A
  • SMGs

ஆகிய துப்பாக்கிகளில் இந்த தோட்டாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதுவே காவல்துறையை பொறுத்தவரை

  • Browning Hi-Power
  • Trichy Pistol
  • Glock Pistols

போன்ற கை துப்பாக்கிகளில் இந்த தோட்டாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சுடும்போது அதிர்வு குறைவாக இருக்கும் என்பதால், இந்த தோட்டாக்கள் எளிதாக இலக்கை கடுமையாக தாக்கும். அதேபோல விலையும் குறைவு என்பதாலும் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் டெல்லி சம்பவத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் அனைவரின் துப்பாக்கி தோட்டாக்களும் பரிசோதித்து பார்க்கப்பட்டன. அனைத்தும் சரியாக இருந்திருக்கிறது. அப்படியெனில் சம்பவ இடத்தில் கிடைத்த தோட்டாக்கள் யாருடையது? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

செங்கோட்டை மெட்ரோ நிலைய வாயில் எண் 1 அருகே கார் வெடிப்பு நடந்திருக்கிறது. இந்த வெடிப்பு தீவிரவாத சதி செயல் என்று மத்திய அரசு சந்தேகம் தெரிவித்திருக்கிறது. மட்டுமல்லாது காரை ஓட்டிக்கொண்டு வந்த டாக்டர் உமர் நபி, தீவிரவாதியாக இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்திருக்கிறது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் டாக்டர் உமர் நபியின் உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போனது. இருப்பினும் சிதைந்த உடலிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ, உமர் நபி தாயாரின் டிஎன்ஏ உடன் ஒத்து போகிறது.

அதேபோல சம்பவ இடத்தில் தடயவியல் துறையினர் நடத்திய ஆய்வில், வெடித்து சிதறிய காரில் உயர் ரக வெடி பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது அமோனியம் நைட்ரேட்டாக இருக்கலாம் என்றும், மொத்தம் 30-40 கிலோ இருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+