அவசர சிகிச்சை பிரிவில் அருண் ஜெட்லி அட்மிட்.. எய்ம்ஸ் மருத்துவமனை பரபரப்பு அறிக்கை
டெல்லி: உடல் நலக்குறைவால் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அருண் ஜேட்லிக்கு சில மாதங்கள் முன்பாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் காரணமாக தற்போதைய நரேந்திர மோடி ஆட்சியில் அவர் அமைச்சரவையில் சேர மறுத்து விட்டார். தனது வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.

இந்த நிலையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் இன்று, காலை 10 மணி முதல், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அருண் ஜெட்லிக்கு என்ன பிரச்சனை என்பது உடனடியாக தெரியவில்லை. பலவீனமாக உணர்ந்ததாகவும், மூச்சுவிட சிரமப்பட்டதாகவும், எனவே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக அருண் ஜேட்லிக்கு இதய பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி உள்ளிட்ட பெரிய தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அருண் ஜெட்லி உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
இதனிடையே, இரவு 9 மணியளவில், எய்ம்ஸ் மருத்துவமனை, ஒரு ஹெல்த் புல்லட்டின் அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:
அருண் ஜெட்லி இன்று காலை எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் பலதரப்பட்ட மருத்துவ நிபுணர் குழுவின் மேற்பார்வையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, அவர் இதய நிலை சீராக உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications