அருண்ஜேட்லி தொடர்ந்து கவலைக்கிடம்.. உயிர்காக்கும் கருவிகள் பொருத்தம்.. பாஜகவினர் கவலை
டெல்லி: முன்னாள் நிதி அமைச்சர் அருண்ஜேட்லியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவருக்கு தற்போது உயிர்காப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்ஜேட்லி (66). இவர் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார். மேலும் இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், உடல்நிலை பாதிப்பால் தான் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் தனக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டாம் என கடிதம் அளித்துவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த சனிக்கிழமை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மருத்துவமனைக்கு 10-ஆம் தேதி சென்று பார்வையிட்டு அருண் ஜேட்லியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.
நேற்று முன் இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜேட்லியை மருத்துவமனையில் சந்தித்துவிட்டு சென்றார். இவர் சென்றதும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மருத்துவமனைக்கு நள்ளிரவில் வருகை தந்தார்.
அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவரது உடல்நிலையில் கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு உயிர் காப்பு கருவிகள் பொருத்தப்பட்டன.
இந்த நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர்கள், விமானப்படை தளபதிகள், காங்கிரஸ் தலைவர்கள் அபிஷேக் சிங்வி, ஜோதிர்ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோர் நேற்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். இதனால் பாஜகவினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் அருண்ஜேட்லிக்கு எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம். அவருக்கு எக்மோ என்ற கருவியை பொருத்தியுள்ளோம். அந்த கருவியானது இதயம் மற்றும் நுரையீரலை செயல்பட வைப்பதற்கு ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications