அருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி!
அருண்ஜெட்லி அதிசய பிறவி.. குணாதிசயங்கள்
Recommended Video
டெல்லி: வாழும்போதே திறமை மிக்க நபர்களை.. காலம் அரிதாகதான் நமக்கு காட்டும்.. அந்த வகையில் அருண்ஜெட்லியை அவர் வாழும் காலத்திலேயே அவரது குணாதிசயங்களை அறிந்தவர்கள் இந்திய மக்கள்!
சின்ன வயதிலேயே நல்ல படிப்பு, அறிவு, என்பது பொதுவான விஷயம்தான்.. ஆனால் அசாத்திய துணிச்சல்தான் அருண் ஜெட்லியின் அழிக்க முடியாத அடையாளமாக நின்றுவிட்டது!
கல்லூரி காலங்களிலேயே துணிச்சலான செயல்பாடுகள் கட்சி தலைவர்களை ஈர்த்திருந்தன. எமெர்ஜென்சி அமல்படுத்தப்பட்டபோது, 19 மாதங்கள் அனுபவித்த சிறைவாசம் பல நுணுக்கங்களை கற்று கொடுத்தது.. சட்டம் படிக்க தூண்டுகோலானது. இதுதான் அவருக்கு பின்னாளில் டெல்லி ஹைகோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை வாதாட அடித்தளமாகவும் அமைந்தது.

விசி சிங்
பலசந்தர்ப்ப, சூழ்நிலைகளையும் தாண்டி.. எப்படியோ இவர் விபி சிங் கண்ணில் பட்டுவிட்டதுதான் அரசியல் வாழ்வின் உச்சத்துக்கு செல்ல அடித்தளமாக அமைந்தது. அருண்ஜெட்லி ஒரு இளைஞர் என்று கூட விபி சிங் என்ற மாமனிதர் பார்க்கவில்லை.. திறமையை நன்கு அறிந்து வைத்திருந்தார். அதனால்தான், மத்திய வெளியுறவு அமைச்சராக பதவி ஏற்கும்படி வெளிப்படையாகவே கேட்டுக்கொண்டார்.

ஊக்குவிப்பு
இது விபிசிங்கின் ஊக்குவிப்பு என்று எடுத்து கொண்டாலும், அதை நாசூக்காகவும், நாகரீகமும், பணிவுடனும் மறுத்தார் அருண்ஜெட்லி. இதற்கு காரணம், கட்சியில் தன்னை விட நிறைய சீனியர்கள் இருந்ததால்தான்! இப்படி தேடி வந்த பதவிகளையும், சீனியர்களுக்காக வழிவிட்டு ஒதுங்கி நின்றவர் அருண்ஜெட்லி! இந்த குணம் எத்தனை பேருக்கு வாய்க்கும் என்பது ஆச்சரியம்தான்!

வாஜ்பாய்
மறைந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மத்திய இணைஅமைச்சராக நியமிக்கப்பட்ட, அருண்ஜெட்லி, தன்னுடைய திறமையால் ரொம்ப சீக்கிரமாகவே கேபினட் அந்தஸ்துக்கு உயர்ந்தார். மோடி அரசின் வரிவிதிப்பு முறையிலும் அருண்ஜெட்லியின் பங்கு அதிகம்தான்.

நிதி கொள்கை
டெல்லி ஹைகோர்ட்டின் வக்கீலாக இவர் நியமனம் செய்யப்பட்டபோதே, பல முக்கிய, சிக்கலான வழக்குகளை மிக சாதுர்யமாக கையாண்ட அருண்ஜெட்லிக்கு, அரசின் நிதி கொள்கை குறித்த அறிக்கைகளை தாக்கல் செய்வதில் அவ்வளவு கஷ்டம் இருந்ததில்லை. ஒவ்வொரு நிதி திட்டங்களையும், அதற்கான செலவினங்களுடன் இவர் எடுத்துரைக்கும் பாங்கு, அலாதியானது.

அதிசயம்
யாரையுமே கெடுக்காமல், யாருக்குமே பயப்படாமல், நேர்மையான பாதையில் அனைத்து பொறுப்புகளையும் வகித்து முடித்த அருண்ஜெட்லி.. இந்தியாவின் ஒரு அதிசயம்தான்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications