Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்குமா? தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு.. நீதிபதி சொன்ன பாயிண்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆசியக்கோப்பை டி20 போட்டியில் வரும் 14ம் தேதி துபாயில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கு தடைக்கோரி பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக நாளை விசாரிக்க வைக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டப்படி நடைபெற உள்ளது.

ஆசிய நாடுகள் இடையே 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. கடந்த, 2023ம் ஆண்டில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

asia-cup-2025-supreme-court-refuses-to-takes-urgent-hiring-of-plea-which-is-request-to-stop-india

இதையடுத்து நேற்று முன்தினம் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 போட்டியாக தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடந்து வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

முதல் போட்டியில் இந்தியா வெற்றி

அதன்படி 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.

நேற்று இந்தியா - ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 13.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்னில் சுருண்டது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்தியா - பாக்., போட்டிக்கு தடை கோரி மனு

இந்தியா தனது 2 லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி வரும் 14ம் தேதி துபாய் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் பாகிஸ்தானுடன், இந்தியா கிரிக்கெட் விளையாடுவது நாட்டின் நலனுக்கு எதிரானதாக உள்ளது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் உடனான மோதலில் மரணமைடைந்த ராணுவ வீரர்கள் மற்றும் மக்களின் உயிர் தியாகத்தை குறைத்து மதிப்பிடுவது போல் அமைந்துள்ளது. இதனால் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும்.

அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை

மேலும் இந்தியாவில் கிரிக்கெட் போட்டி தொடர்பானதை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும். இதற்காக பிசிசிஐ-யைமத்திய விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வந்து தேசிய விளையாட்ட நிர்வாக சட்டம் 2025ன் கீழ் செயல்படுவதை உறுதி செய்வதற்கான வழிக்காட்டுதல்களை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதனால் நாளை இந்த மனுவை பட்டியலிட்டு அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

ஏற்க மறுத்த நீதிபதி

மனுதாரரின் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதி ஜேகே மகேஷ்வரி ஏற்க மறுத்துவிட்டார். அப்போது அவர் வழக்கில் தலையிட மறுத்ததோடு அவசர வழக்காக ஏற்க மறுத்துவிட்டார். இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+