அசாம் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது! ஏப்.9ம் தேதி வாக்குப்பதிவு!
டெல்லி: சட்டமன்ற தேர்தல் நடைபெறும் 5 மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அசாம் மாநிலத்தில் மே.4ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்திருக்கிறார்.
இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "சராசரியாக 700 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என அமைக்கப்பட்டிருக்கிறது. 5 மாநிலங்களில் மொத்தம் 2.18 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

5 மாநிலங்களை சேர்த்து மொத்தம் 17.7 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். மாற்றுத் திறனாளிகள் மற்றும், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. வெளிப்படையாக தேர்தல் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மொத்தமாக 8.5 லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இந்த தேர்தலில், தகுதியற்ற ஒருவர் கூட வாக்களிக்க முடியாது. அதேபோல தகுதியானவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். வாக்குச்சாவடிகளில் மொபைல் போன்களை பத்திரமாக வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வாக்குச்சாவடிகள் முழுவதும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு நேரம் அறிவிக்கப்படும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் பொருத்தப்படும். 17சி படிவம் மற்றும் மின்னணு வாக்குகள் எண்ணிக்கை வேறுபட்டால் மீண்டும் வாக்குகள் எண்ணப்படும்.
அசாம் சட்டமன்றத்திற்கு ஏப்.9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும். வாக்க எண்ணிக்கை மே.4ம் தேதி நடைபெறும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications