டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது சமரச குழு

Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தி வழக்கில் நியமிக்கப்பட்ட சமரச குழு தமது அறிக்கையை இன்று உச்சநீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தது.

அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி நிலம் தொடர்பாக 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Ayodhya Case: Mediation Panel submits report in Sc

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக தீர்வு காண நீதிபதி கலிபுல்லா தலைமையில் சமரச குழுவை அமைத்தது. மேலும் ஜூலை 18-க்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து கடந்த 18-ந் தேதி இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து தமது முழு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கலிபுல்லா தலைமையிலான சமர குழு இன்று தாக்கல் செய்தது.

இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது.

English summary
The three member mediation panel for Ayodhya land case, has submitted its report in a sealed cover to the Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X