அயோத்தி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது சமரச குழு
டெல்லி: அயோத்தி வழக்கில் நியமிக்கப்பட்ட சமரச குழு தமது அறிக்கையை இன்று உச்சநீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்தது.
அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதி நிலம் தொடர்பாக 2010-ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக தீர்வு காண நீதிபதி கலிபுல்லா தலைமையில் சமரச குழுவை அமைத்தது. மேலும் ஜூலை 18-க்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து கடந்த 18-ந் தேதி இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து தமது முழு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கலிபுல்லா தலைமையிலான சமர குழு இன்று தாக்கல் செய்தது.
இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளது.