அயோத்தி தீர்ப்பு.. 24 முறை மதசார்பின்மை வார்த்தையை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்
Recommended Video
டெல்லி: அயோத்தி நிலப்பிரச்சினை வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும் போது, இரு மதப் பிரிவினர் நடுவே எந்த ஒரு உரசலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிக மிக கவனம் செலுத்தியுள்ளது.
1045 பக்க தீர்ப்பில் 24 முறை மத சார்பின்மை என்ற வார்த்தையை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ளது இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு பெரும் சமூகத்தினர் நடுவே, நீண்ட நெடுங்காலமாக சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்த ஒரு பிரச்சினை என்பதால் உச்ச நீதிமன்றம் இதை மிகவும் பொறுப்புணர்வுடன் ஜாக்கிரதை உணர்வுடன் கையாண்டுள்ளது.

மத நம்பிக்கை
தீர்ப்பில் ஒரு வரி இப்படி சொல்கிறது. மத நம்பிக்கை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் சம மதிப்பு வழங்க வேண்டும் என்பது அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவை இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உரிய கடமையாக வரையறுக்கப்பட்டுள்ளது என்கிறது அந்த வரி.

தவறான செயல்கள்
தார்மீக ரீதியான, தவறான செயல்களால் நமது வரலாறு நிரம்பியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இன்றும் கூட அது கருத்தியல் விவாதத்தைத் தூண்டுகிறது என்பதை மறுக்க முடியாது.

அடிப்படை
காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அனைத்து மத நம்பிக்கையாளர்களுக்கும் சரி சம உரிமை வழங்கப்பட்டு, அவர்களின் மத வழிபாட்டில் மற்றவர்கள் தலையிட மாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை வழங்கப்பட்டு வந்துள்ளது. மதசார்பின்மை மற்றும் அனைத்து மதங்களுக்கும் சம பாவனை என்பது அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை அம்சம் என்கிறது என்று தீர்ப்பு.

அரசியலமைப்பு
அரசியலமைப்பு எப்போதும் மதிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்வதையும் மீண்டும் வலியுறுத்துகிறோம். எல்லா மதங்களின் சமத்துவமும். மதச்சார்பின்மையும், இந்த நாட்டின் அடிப்படை. இவ்வாறு தீர்ப்பில் வரிகள் இடம் பெற்றுள்ளன.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications