அயோத்தி தீர்ப்பு.. 24 முறை மதசார்பின்மை வார்த்தையை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்
Recommended Video
டெல்லி: அயோத்தி நிலப்பிரச்சினை வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கும் போது, இரு மதப் பிரிவினர் நடுவே எந்த ஒரு உரசலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிக மிக கவனம் செலுத்தியுள்ளது.
1045 பக்க தீர்ப்பில் 24 முறை மத சார்பின்மை என்ற வார்த்தையை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ளது இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு பெரும் சமூகத்தினர் நடுவே, நீண்ட நெடுங்காலமாக சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்த ஒரு பிரச்சினை என்பதால் உச்ச நீதிமன்றம் இதை மிகவும் பொறுப்புணர்வுடன் ஜாக்கிரதை உணர்வுடன் கையாண்டுள்ளது.

மத நம்பிக்கை
தீர்ப்பில் ஒரு வரி இப்படி சொல்கிறது. மத நம்பிக்கை என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையாக வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மத நம்பிக்கைகளுக்கும் சம மதிப்பு வழங்க வேண்டும் என்பது அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவை இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உரிய கடமையாக வரையறுக்கப்பட்டுள்ளது என்கிறது அந்த வரி.

தவறான செயல்கள்
தார்மீக ரீதியான, தவறான செயல்களால் நமது வரலாறு நிரம்பியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இன்றும் கூட அது கருத்தியல் விவாதத்தைத் தூண்டுகிறது என்பதை மறுக்க முடியாது.

அடிப்படை
காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அனைத்து மத நம்பிக்கையாளர்களுக்கும் சரி சம உரிமை வழங்கப்பட்டு, அவர்களின் மத வழிபாட்டில் மற்றவர்கள் தலையிட மாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கை வழங்கப்பட்டு வந்துள்ளது. மதசார்பின்மை மற்றும் அனைத்து மதங்களுக்கும் சம பாவனை என்பது அரசியல் சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை அம்சம் என்கிறது என்று தீர்ப்பு.

அரசியலமைப்பு
அரசியலமைப்பு எப்போதும் மதிக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்வதையும் மீண்டும் வலியுறுத்துகிறோம். எல்லா மதங்களின் சமத்துவமும். மதச்சார்பின்மையும், இந்த நாட்டின் அடிப்படை. இவ்வாறு தீர்ப்பில் வரிகள் இடம் பெற்றுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications