பாஜகவின் 5-வது வேட்பாளர் பட்டியல்- மேலும் 2 மத்திய அமைச்சர்கள், 37 சிட்டிங் எம்பிக்களுக்கு கல்தா!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான மேலும் 111 வேட்பாளர்களுடன் 5-வது வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இந்தப் பட்டியலில் மேலும் 2 மத்திய அமைச்சர்களுக்கும் 37 சிட்டிங் எம்பிக்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் உத்தர கன்னடாவில் 6 முறை வென்ற மூத்த பாஜக தலைவர் அனந்தகுமார் ஹெக்டேவுக்கும் பாஜக மேலிடம் இம்முறை வாய்ப்பு தரவில்லை.
543 லோக்சபா தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் 102 தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.

5-வது வேட்பாளர் பட்டியல்: 18-வது லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மத்தியில் ஆளும் பாஜகவின் வேட்பாளர்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் 5-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 111 வேட்பாளர்களுடன் இந்த 5-வது பட்டியல் வெளியிடப்பட்டது. பாஜக இதுவரை மொத்தம் 398 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
37 சிட்டிங் எம்பிக்களுக்கு வாய்ப்பு மறுப்பு: பாஜகவின் 5-வது வேட்பாளர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் விகே சிங், அஸ்வினி குமார் செளபே ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் 37 சிட்டிங் எம்பிக்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடவும் பாஜக வாய்ப்பு தரவில்லை. இவர்களில் 9 பேர் உ.பியை சேர்ந்தவர்கள்; குஜராத் 4, ஒடிஷா 4, பீகார் 3, கர்நாடகா 3, ஜார்க்கண்ட் 3 சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 7, ஹரியானா 4, கர்நாடகா 4, கேரளா 4, ஒடிஷா 18, மகாராஷ்டிரா 3, ஜார்க்கண்ட் 3 வேட்பாளர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
வருண் காந்திக்கு சீட் மறுப்பு: பாஜகவின் 5-வது வேட்பாளர் பட்டியலில் நேரு குடும்பத்தைச் சேர்ந்த வருண் காந்திக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. பாஜகவை மிக கடுமையாக விமர்சித்து வந்தவர் வருண் காந்தி. ஆனால் வருண் காந்தியின் தாயார் மேனகா காந்தி, சுல்தான்பூரில் போட்டியிட மீண்டும் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. நடிகை கங்கனா ரணாவத், நடிகர் அருண் கோவில் ஆகியோருக்கும் பாஜக போட்டியிட வாய்ப்பு தந்துள்ளது.
கட்சி தாவியவர்களுக்கு சீட்: பல்வேறு கட்சிகளில் இருந்து தப்பி ஓடி பாஜகவில் அடைக்கலமானவர்களுக்கும் பாஜக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த தொழிலதிபர் நவீன் ஜிண்டால், வரபிரசாத் ராவ், சீதா சோரன், தபாஸ் ராய், கிரண் குமார் ரெட்டி உள்ளிட்டோருக்கு லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
கர்நாடகா: கர்நாடகாவில் உத்தர கன்னடா லோக்சபா தொகுதியில் 6 முறை வென்ற பாஜகவின் மூத்த தலைவர் அனந்தகுமார் ஹெக்டேவுக்கு மீண்டும் சீட் தரப்படவில்லை. தீவிர இந்துத்துவா ஆதரவாளரான அனந்தகுமார் ஹெக்டே பல்வேறு சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கியவர். கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் காங்கிரஸுக்கு ஓடிப் போய் பாஜகவுக்கே மீண்டும் திரும்பிய முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பெல்காம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
பீகார்: பீகார் மாநிலத்தில் பாஜக போட்டியிடும் 17 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பெகுசராய் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பாட்னா சாகிப் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மே.வங்கம்: மேற்கு வங்க மாநிலத்தில் 19 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்களை அறிவித்தது. இதில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து பாஜகவில் இணைந்த அபிஜித் கங்கோபாத்யாயா தம்லுக் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திரா: ஆந்திரா மாநில பாஜக தலைவரான என்.டி.ராமாராவ் மகள் புரந்தரேஸ்வரி, ராஜமுந்திரி லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆந்திரா முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி ராஜம்பேட் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
-
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications