Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கச்சேரி ஆரம்பம்! நாயுடு, நிதிஷுக்கு முக்கிய இடத்தில்.. ஆப்பு வைத்த பாஜக! இதெல்லாம் லிஸ்டுலேயே இல்லை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்தியில் மைனாரிட்டி ஆட்சியை பாஜக செய்து வரும் நிலையில், கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு முக்கியமான செக் ஒன்றை பாஜக வைக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

2024 லோக்சபா தேர்தலில் தனிப்பட்ட வகையில் பாஜக வெற்றி பெற முடியாமல் படுதோல்வி அடைந்து உள்ளது. என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்து இருந்தாலும் பாஜக தனிப்பட்ட வகையில் மெஜாரிட்டியை இழந்து உள்ளது.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress

கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 40 இடங்களை வைத்து இருக்கும் சந்திர பாபு நாயுடு, நிதிஷ் குமார், ஷிண்டே சிவசேனா ஆகியோரின் உதவிதான் மோடி ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது

கூட்டணி கட்சிகளுக்கு ஆப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான் மத்தியில் மைனாரிட்டி ஆட்சியை பாஜக செய்து வரும் நிலையில், கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு முக்கியமான செக் ஒன்றை பாஜக வைக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

பாரதிய ஜனதா கட்சி 18 வது மக்களவைக்கான சபாநாயகர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறதாம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை அக்கட்சி வழங்கக்கூடும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

நாயுடு திட்டம்; 17வது மக்களவையில் பாஜகவின் ஓம் பிர்லா சபாநாயகராக இருந்த நிலையில், துணை சபாநாயகர் அலுவலகம் காலியாக இருந்தது. இந்திய கூட்டணி 233 இடங்களில் வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சிகள் மீண்டும் எழுச்சி கண்டுள்ளன.

இந்த நிலையில் சபாநாயகர் தேர்தலில் சில கட்சிகள் கிராஸ் வாக்குகள் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதாவது சிவசேனா, ஐக்கிய ஜனதா தளத்திலேயே சிலர் கிராஸ் வாக்குகள் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இதை மனதில் வைத்தே சபாநாயகர் பதவியை பெற இந்தியா கூட்டணி காய் நகர்த்துகிறதாம். இந்தியா கூட்டணி ஒருவேளை சபாநாயகர் பதவியை பெற்றால் அது பாஜகவிற்கு பெரிய அடியாக இருக்கும்.

நாயுடுவும் திட்டம்: இப்படிப்பட்ட நிலையில்தான் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரும் ஸ்பீக்கர் போஸ்டை பாஜக கூட்டணியில் பெறுவதற்கு தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இரண்டு பேருமே "சபாநாயகர்" பதவியை தங்களுக்கான "இன்சூரன்ஸ்" ஆக பார்க்கின்றனர் என்று அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொடுக்க சான்ஸ் இல்லை: ஆனால் இவர்களுக்கு சபாநாயகர் பதவி கொடுக்காமல்.. தங்களுக்குள் சபாநாயகர் பதவியை தக்க வைக்க பாஜக முடிவு செய்துள்ளதாம். கூட்டணி கட்சிகள் எவ்வளவு பிரஷர் கொடுத்தாலும் அவர்களுக்கு சபாநாயகர் பதவி கொடுக்க முடியாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+