அசைக்க முடியாது.. பாஜக வைத்ததுதான் சட்டம்.. ராஜ்யசபாவில் பெரும்பான்மையை நோக்கி முன்னேறும் என்.டி.ஏ!
டெல்லி: நேற்று நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் கூடுதல் இடங்களைப் பிடித்ததன் மூலம், ராஜ்யசபாவில் பாஜக எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பான்மை நம்பரை பெற என்.டி.ஏ கூட்டணிக்கு இன்னும் 4 ராஜ்யசபா எம்.பிக்கள் மட்டுமே தேவை.
நமது நாடாளுமன்றத்தில் உள்ள ராஜ்யசபாவில் எம்.பிக்களுக்கான பதவிக்காலம் 6 ஆண்டுகள். பதவிக்காலம் முடியும் போது தனித்தனியாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டு, அந்த இடங்கள் நிரப்பப்படும். எம்எல்ஏக்கள் வாக்களித்து, அந்தந்த மாநிலங்களின் ராஜ்யசபா உறுப்பினர்களைத் தேர்வு செய்வார்கள். அதன்படி நேற்று பல மாநிலங்களில் ராஜ்யசபா இடங்கள் நிரப்பப்பட்டன.

56 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு தேர்தல்: 15 மாநிலங்களில் காலியாகும் 56 ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளுக்கு பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. 13 மாநிலங்களை சேர்ந்த 50 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி முடிவடைகிறது. 2 மாநிலங்களை சேர்ந்த 6 உறுப்பினர்கள் வருகின்ற ஏப்ரல் 3ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்கள்.
அதன்படி, மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. உத்தர பிரதேசம் - 10, பீகார் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் தலா 6, மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா 5, குஜராத் மற்றும் கர்நாடகாவிலிருந்து தலா 4, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர், ஹரியானாவில் இருந்து தலா 3 , இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 1 என மொத்தம் 56 ராஜ்ய சபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
15 இடங்களுக்கு போட்டி: இதில் 41 இடங்களுக்கு போட்டியின்றி ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வாகினர். பாஜக தேசிய தலைவர் நட்டா, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வாகினர். 15 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. உ.பியில் 10 இடங்களுக்கு 11 பேர் போட்டியிட்டனர். கர்நாடகாவில் 4 ராஜ்யசபா இடங்களுக்கு 5 பேர் போட்டியிட்டனர். இமாச்சலில் ஒரு இடத்திற்கு 2 பேர் போட்டியிட்டனர். இதன் காரணமாக 15 இடங்களில் தேர்தல் நடைபெற்றது.
மூன்று மாநிலங்களில் உள்ள 15 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பாஜக 10 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. உத்தர பிரதேசத்தில் கூடுதல் இடத்தையும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இடத்தையும் கைப்பற்றியதன் மூலம் பாஜக ராஜ்யசபா எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பாஜக கவுண்ட் அதிகரிக்கிறது: நேற்று தேர்தல் நடைபெற்ற 56 ராஜ்யசபா இடங்களில், அன்னப்போஸ்டாக தேர்வான 20 இடங்கள் உட்பட 30 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. இதன் மூலம் ராஜ்யசபாவில் பாஜக எம்.பிக்களின் எண்ணிக்கை 97 ஆகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) எம்.பிக்களின் எண்ணிக்கை 117 ஆகவும் அதிகரிக்கிறது.
இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 56 ராஜ்யசபா உறுப்பினர்களும் பதவியேற்றவுடன் 240 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற மாநிலங்களவையில் 121 என்ற பெரும்பான்மைக்கு நான்கு இடங்கள் மட்டுமே பாஜகவுக்கு குறைவாக இருக்கும். மாநிலங்களவையில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ளது.
ராஜ்யசபாவில் மெஜாரிட்டி வரப்போகுது: நேற்று மாலை முடிவுகள் வெளியான பிறகு, பாஜக 97 உறுப்பினர்களுடன் (கட்சியில் இணைந்த ஐந்து நியமன உறுப்பினர்கள் உட்பட) ராஜ்யசபாவில் தனிப் பெரும் கட்சியாக நீடிக்கிறது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 29 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 13, திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தலா 10 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. பிஜேடி மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலா 9 எம்.பிக்கள், பிஆர்எஸ் 7, ஆர்ஜேடி 6, சிபிஐஎம் ஐந்து, அதிமுக மற்றும் ஜேடி(யு) தலா நான்கு எம்.பிக்களைக் கொண்டுள்ளன.
117 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி. ராஜ்யசபாவில் பெரும்பான்மைக்கு 121 இடங்கள் தேவை. அந்த எண்ணிக்கையைப் பெற நான்கு இடங்கள் மட்டுமே குறைவாக உள்ளது. ராஜ்யசபாவிலும் பெரும்பான்மை பெற்றால், பாஜக அரசு, எந்தவொரு மசோதாவையும் ராஜ்யசபாவில் எளிதாக நிறைவேற்றும் சூழல் ஏற்படும்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications