அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!
டெல்லி: தமிழ்நாட்டில் நடந்த முடிந்த சட்டசபைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்ற நிலையில், மற்ற கட்சிகளில் வரிசையாகப் புகைச்சல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக யாருமே எதிர்பார்க்காத வகையில் தமிழ்நாடு பாஜகவில் மோதல் வெடித்துள்ளது. பாஜகவில் இருந்து அண்ணாமலை விலக முடிவு செய்துள்ளாராம். இது தொடர்பாக அவர் டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து பல பரபர அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.
அண்ணாமலை கடந்த சில நாட்களாகவே டெல்லியில் முகாமிட்டிருக்கிறார். அவர் பாஜக தேசியத் தலைவர் நபின், உள் துறை அமைச்சர் அமித் ஷா பிறகு கடைசியாகப் பிரதமர் மோடி எனப் பலரை நேரில் சந்தித்தார். தேசியத் தலைமையுடன் தனக்கு எந்தவொரு மன கசப்பும் இல்லை எனச் சொல்லும் அண்ணாமலை, மாநில பாஜக மீது பல புகார்களைச் சொன்னதாகத் தெரிகிறது.

வினோத விளக்கம்
மேலும், அவர் பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழக பாஜக மொத்தமாக உடையப் போகிறதா என்ற பரபரப்பான கேள்விக்குத் தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லியில் அதிரடியாக விளக்கமளித்துள்ளார். டெல்லி மேலிடத்தின் அழைப்பின் பெயரில் டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அங்குச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுகிறார், புதிய கட்சி தொடங்குகிறார் என்ற செய்திகளில் உண்மையில்லை. அவர் தனது ராஜினாமா கடிதத்தை மேலிடத்தில் கொடுக்கவில்லை. அவருக்கும் எனக்கும் எந்தவிதமான மோதலும், கருத்து வேறுபாடும் கிடையாது" என்று ஒட்டுமொத்தமாக மறுத்தார்.
அண்ணாமலை ஏன் டெல்லியில் முகாமிட்டு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்தார் என்ற கேள்விக்கு, "அண்ணாமலை டெல்லி வந்தது உரப் பற்றாக்குறை மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானைச் சந்தித்துப் பேசுவதற்காகத்தான்" என்று ஒரே போடாக போட்டார் நயினார் நாகேந்திரன்!
ஓரங்கட்டப்படவில்லை
மேலும், அண்ணாமலைக்குத் தேசிய அளவில் பெரிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், அவர் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் ஓரங்கட்டப்பட்டார் என்றும் பரவும் செய்திகளுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்புத் தெரிவித்தார். இது தொடர்பாக நயினார், "தேர்தலில் அண்ணாமலை புறக்கணிக்கப்பட்டார் என்பதில் உண்மை இல்லை. ஹெலிகாப்டர் மூலம் தமிழகம் முழுவதும் பறந்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அவர் ஓரங்கட்டப்படவில்லை" என்று விளக்கமளித்தார்.
தமிழ்நாடு பாஜக தரப்பில் இது போலச் சமாளிக்க விளக்கம் தரப்பட்டாலும் கூட அங்குக் களம் வேறு விதமாகவே இருக்கிறதாம். அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் தர முன்வந்த ராஜ்யசபா எம்பி பதவியை அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என்பதுதான் தற்போதைய நிதர்சனம். அண்ணாமலை தரப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள், அவர் பாஜக மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுள்ளன..
காரணங்கள்
முதலில் சட்டென தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டது அவருக்குப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அடுத்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. அண்ணாமலை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்த அதிமுக கூட்டணியை மீண்டும் புதுப்பிக்க டெல்லி மேலிடம் எடுத்த முடிவில் அவருக்கு உடன்பாடில்லை. அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடத்திய பாதயாத்திரையின் போது, அவருக்கு மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்குக் கிடைத்தது. ஆனால், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாஜக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த சில முக்கியத் தலைவர்களே அவருக்கு முட்டுக்கட்டை போட முயன்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் தேசிய தலைமையிடம் அவர் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.
அடுத்த திட்டம்
நயினார் நாகேந்திரன் டெல்லியில் சமாதானம் பேசினாலும், அண்ணாமலை தனது முடிவில் மிக உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. பாஜகவில் இருந்து சுமுகமான முறையில் விடைபெறவே அவர் விரும்புவதாகவும், அதேநேரம் மேலிடம் அவரைத் தக்கவைக்கப் போராடுவதாகவும் டெல்லி தகவல்கள் கூறுகின்றன.
அண்ணாமலை நாளை ஜூன் 5ஆம் தேதி தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தை மக்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குப் பயிற்சி அளித்து, ஒரு புதிய தலைமுறைத் தலைவர்களை உருவாக்கும் நோக்கில் ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை அவர் நாளை தொடங்க உள்ளார். இந்த இயக்கம் மிக விரைவில் ஒரு புதிய அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்றும், வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் களம் காணும் என்றும் அண்ணாமலை தரப்பு வட்டாரங்கள் அதிரடியாகத் தெரிவித்துள்ளன.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications