காஷ்மீர் பாணியில் ஒடிஷா, மே.வங்கம், தமிழ்நாட்டையும் பிரிப்பீர்களா? ப.சிதம்பரம் தாக்கு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பாணியில் ஒடிஷா, மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களையும் மத்திய அரசு பிரிப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது; ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவை ரத்து செய்திருப்பதும் மாநிலத்தை பிரித்திருப்பதும் மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
ராஜ்யசபாவில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ப. சிதம்பரம் பேசியதாவது:
மிகப்பெரிய தவறை இந்த சபை இன்று செய்துள்ளது; எதிர்கால சந்ததியினருக்காக, நான் உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன். ஜம்மு காஷ்மீரை வல்லபாய் பட்டேல், கோபால் அய்யங்கார், மகாராஜா ஹரிசிங் உள்ளிட்டொஒர் பெரும்பாடுபட்டு இந்தியாவுடன் இணைத்தனர். ஜம்மு காஷ்மீரின் பெரும்பான்மை மக்கள் பிரிவினையை விரும்பவில்லை.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மாற்றவே முடியாது. மத்திய அரசின் 370-வது பிரிவு ரத்து நடவடிக்கையானது காஷ்மீரில் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

எதிர்காலம் தீர்மானிக்கும்
காஷ்மீர் விவகாரத்தில் வெற்றி பெற்றதாக பாஜக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது, ஆனால் பாஜக அரசு தோற்றுவிட்டது என்பதை வரலாறு நிரூபிக்கும். இந்திய அரசியல் சாசன வரலாற்றில் இன்றைய தினம் துக்க தினம்.

ஒன்றிய அரசை சிதைக்கும் மத்திய அரசு
சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான காஷ்மீர் இளைஞர்கள் திசை மாறுகிற அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநிலங்கள் இணைந்த இந்திய ஒன்றியம் என்கிற அமைப்பையே பாஜக சிதைக்கிறது.

மாநில உரிமைகள் முக்கியம்
மாநிலங்களை நகராட்சி நிர்வாகங்கள் போல பாஜக மாற்றுகிறது. மாநிலங்களின் உரிமையை பாதுகாக்க வேண்டியதுதான் மாநிலங்களவையின் கடமை. மக்களின் உரிமையை காக்க வேண்டியது அரசின் மிகப்பெரிய கடமை.

தமிழகத்தை பிரித்தாலும் தடுக்க முடியாது
ஜம்மு காஷ்மீர் மாநிலம் துண்டாடப்படுவது மிகவும் கண்டனத்துக்குரியது. இதே சட்டத்தைப் பயன்படுத்தி பிற மாநிலங்களையும் நீங்கள் பிரிக்கக் கூடும். ஒடிஷா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை நீங்கள் பிரிப்பதை எந்த ஒரு சக்தியாலும் தடுக்க முடியாத நிலை உருவாகிவிட்டது. இதர மாநிலங்களுக்கு மிக மோசமான முன்னுதாரணத்தை மத்திய அரசு உருவாக்கிவிட்டடது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications