'நாசில் ஸ்பிரே'.. 6 மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி போட்டால் சிறந்தது: பாரத் பயோடெக்

மூக்கு வழியாக ஸ்பிரே செய்யும் தடுப்பு மருந்து ரெடியாகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "2-வது தடுப்பூசி போட்டு 6 மாதங்களான பிறகு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது".. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா தெரிவித்துள்ளார்.

உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸை ஒழிக்க விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் பாடுபட்டு வருகிறார்கள்.

இதற்கான மருந்தையும், சிகிச்சையையும் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.. இதுவரை நிரந்தர தீர்வுக்கான எந்தவிதமான மருந்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை..

 மருந்துகள்

மருந்துகள்

அதேசமயம் இந்த தொற்று வீரியம் அதிகரித்து மேலும் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளையும் விடாமல் முயற்சித்து கொண்டிருக்கின்றனர். அவைகள் குறித்த ஆய்வுகளின் முடிவுகளையும் அவ்வப்போது வெளியிட்டும் வருகின்றனர். அந்த வகையில், இப்போதும் ஒரு புது முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த போக்ஸ்பயோ என்ற நிறுவனம், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக மூக்கு வழியாக செலுத்துகிற ஸ்பிரே தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வந்தன.

அறிமுகம்

அறிமுகம்

இதைதான் இந்தியாவில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் தற்போது விருப்பம் தெரிவித்திருந்தது... இதற்கான அனுமதியையும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.. மற்றொருபுறம், இதே தடுப்பை மருந்தை இந்திய நிறுவனமே தயாரித்து, மலிவு விலையில் கிடைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று போக்ஸ்பயோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

 ஸ்பிரே மருந்து

ஸ்பிரே மருந்து

இந்த தடுப்பு மருந்தானது தொற்று பாதிப்பை தடுப்பதில் 63 சதவீதம் பயனுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.. இந்த மருந்தை இந்த தடுப்பு மருந்தை இரு நாசிகளிலும் தலா 2 ஸ்பிரேயை ஒருவர் தானாகவே செலுத்திக்கொள்ள முடியும் என்றும், 6 முதல் 8 மணி நேரம் பாதுகாப்பைத்தரும் என்றும் சொல்லப்படுகிறது... தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியமானதுதான் என்றாலும், அது 100 சதவீதம் பயன் தருவதில்லை.. தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கொரோனா தொற்று பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது.. அதனால்தான், போக்ஸ்வெல் என்ற பெயரில் தடுப்பு மருந்து கண்டறிந்ததாக அந்நிறுவனத்தினர் மேலும் சொல்கிறார்கள்.

ஸ்பிரே

ஸ்பிரே

இப்போது கூடுதல் தகவல் என்னவென்றால், மொத்த உலக நாடுகளுமே, மூக்கு வழியாக செலுத்தக்கூடிய இந்த ஸ்பிரே தடுப்பூசிக்காக காத்திருக்கிறது, இது பரவலை தடுக்கும் ஒரே வழியாகும் என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்... பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா, டிவி சேனல் ஒன்றுக்கு நடத்திய நிகழ்ச்சியில் இதை பற்றி சொல்லும்போது, "2-வது தடுப்பூசி போட்டு 6 மாதங்களான பிறகு பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது.. பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பொறுத்தமட்டில், கோவேக்சினை காட்டிலும் மூக்கு வழியே செலுத்தக்கூடியது நலமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

சிறந்தது

சிறந்தது

உலக நாடுகள் அனைத்துமே நாசி வழியாக செலுத்தக்கூடிய இந்த தடுப்பூசிக்காக காத்திருக்கிறது. இது பரவலை தடுக்கும் ஒரே வழியாகும்... நாங்கள் நாசி வழியே செலுத்தும் தடுப்பூசியை கொண்டு வருகிறோம். கோவேக்சினை முதல் டோஸாக தந்து விட்டு, 2வது டோஸாக நாசி வழியாக செலுத்துகிற தடுப்பூசியை தருவது குறித்து சிந்திக்கிறோம்... கொரோனா பாதித்தவர்களுக்கு அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இது நன்றாக வேலை செய்யும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+